சுபத்ரா குமாரி சவுகான் (16 ஆகஸ்ட் 1904 – 15 பிப்ரவரி 1948)
• 1904 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16- ம் தேதி பிறந்தார்
• கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் • 1921 ஆம் ஆண்டு தனது கணவருடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்
• முதல் பெண் சத்தியாகிரகியான இவர் நாக்பூரில் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார்
• ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 1923 மற்றும் 1942-ஆம்
ஆண்டுகளில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்
• ஹிந்தி கவிதைகளில் பல பிரபலமான படைப்புகளை எழுதியுள்ளார் •ஜான்சிராணி லக்ஷமி பாயின் வாழ்க்கையை விவரிக்கும் உணர்ச்சிபூர்வமான “ஜான்சி கி ராணி” என்ற கவிதை மிகவும் பிரபலமானது
• அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு புகழ்பெற்ற இலக்கியவாதியாக பிரதிபலிக்கும் வகையில் வலுவான தேசியவாத உணர்வுடன் அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன
• 1948-ம் ஆண்டு பிப்ரவரி 15 தேதி மறைந்தார். அவரது நினைவாக, 1976 – ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.