சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்துசந்திரயான்-2 விண்கலம் இன்று 22 July பிற்பகல் இரண்டு மணி 43 நிமிடங்களுக்கு ஜிஎஸ்எல்வி-மார்க்-3 எம்-1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது.
சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1ராக்கெட், இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில் செலுத்தும் திறன்கொண்டது இந்த ராக்கெட்.
43.43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை640 டன். இந்த ராக்கெட் மூன்று பகுதிகளைக் கொண்டது. அடியில் உள்ள முதல்பகுதியில் நிரப்பப்பட்டு இருந்த திரவ எரிபொருள் எரியூட்டப்பட்டு, அது அதிர்வோடுராக்கெட்டை உந்தி மேலே எழும்பச் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதுபகுதியில் உள்ள திட எரிபொருள் எரியூட்டப்பட்டு, ராக்கெட் சந்திரயான்-2 விண்கலத்தை சுமார் 170 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்றது.
அதற்கு மேல் மூன்றாவது அடுக்கில் உள்ள கிரையோஜெனிக் எரிபொருள்எரியூட்டப்பட்டு, ராக்கெட் விண்கலத்துடன் 176 கிலோ மீட்டர் உயரத்திற்குகொண்டு செல்லப்பட்டு, பின்னர், 181 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்,சந்திரயான் விண்கலத்தை பிரித்து அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் திரு. கே.சிவன், இன்றைய தினம் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார்.
சந்திரனின் தென்துருவத்தில் இதுவரை கண்டறியப்படாதவற்றை கண்டறிவதற்கான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இதுவொரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளி அரங்கில் இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என்றார்.

கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு, 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். எனினும், அடுத்த ஒன்றரை நாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட திரு. கே. சிவன், ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 செலுத்துவாகனத்தை வெற்றிகரமாக செலுத்த கடின உழைப்பை வழங்கிய இஸ்ரோவின் அனைத்துப் பிரிவினருக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பழுது நீக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, இதற்கு முந்தைய ஜிஎஸ்எல்வி செலுத்துவாகனத்தின் செயல்பாடுகளைவிட, இன்று செலுத்தப்பட்ட வாகனத்தின் செயல்திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 6,000 கிலோமீட்டர் இயங்கத் தேவையான எரிபொருள் கிடைத்திருப்பதன் மூலம், விண்கலத்தின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்படுவதை இஸ்ரோவும், இந்தியாவும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் கொடி மேலும் உயரப் பறக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் திரு. சிவன் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக கார்ட்டோ-3 உள்ளிட்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 23 நாட்களுக்கு சந்திரயான்-2 விண்கலம் பூமியை அதன்நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும். பூமிக்கு அருகாமையில் வரும் போது, அதில்உள்ள என்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயான் நீள்வட்டப் பயணப்பாதையின் தூரம்படிப்படியாக அதிகரிக்கப்படும். 23-வது நாள் இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்புவிசைப்பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள்மேற்கொள்ளப்பட்டு, 30ஆவது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்டப்பாதையில்சுற்றிவரும் வகையில் இயக்கப்படும். அதனை தொடர்ந்து சுமார் 13 நாட்கள்விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 43-வது நாள் விண்கலத்தின்இரண்டு பகுதிகளான ஆர்பிடெரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர், ஆர்பிடெர்சந்திரனை 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும். ஆர்பிடெரிலிருந்துபிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கிசெலுத்தப்படும். 48-வது நாள் விக்ரம் சந்திரனில் மென்மையாக தரையிறங்கும்.
ஆர்பிடெர்
Orbiter
Weight 2,379 kg
Electric Power Generation Capability 1,000 W
ஆர்பிடெர், சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வு செய்து, பூமிக்கும், சந்திரனில்இறங்கும் விக்ரம் லேண்டருக்கும் தொடர் தகவல்களை அளிக்கும். 682 கிலோஎடைகொண்ட ஆர்பிடெரில் உள்ள எரிபொருளின் எடை 1697 கிலோவாகும். மொத்தஎடை 2379 கிலோவாகும்.
சந்திரனின் தரைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கான பல கருவிகள்ஆர்பிடெரில் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரனை 100 கிலோமீட்டர் உயரத்தில்துருவப் பகுதியின் வழியாக சுற்றிவரும் இந்த ஆர்பிடெரில் சந்திரனின் தரைப்பகுதியை படம் பிடிக்கும் கேமரா, அதிலுள்ள தனிமங்களின் அளவைக் கணக்கிடும்எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சந்திரனில் உறைபனி இருப்பதை உறுதிப்படுத்தும்புகைப்படம் எடுப்பதற்கான கருவி, துருவப் பகுதிகளை படம் பிடிக்கும் கருவி, சந்திரனின் வளி மண்டலத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்ப்ளோரர்-2 கருவி உள்ளிட்டபல கருவிகள் இடம்பெற்றுள்ளன.
விக்ரம் லேண்டர்
சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரின் எரிபொருள் உட்பட மொத்த எடை1471 கிலோவாகும். விக்ரம் லேண்டரிலிருந்து சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வுசெய்யும் பிரக்யான் ரோவர் கருவியின் எடை 27 கிலோவாகும்.
விக்ரம் லேண்டரில் சந்திரனில் ஏற்படக் கூடிய அதிர்வுகளை கண்டுபிடிக்கும்கருவி, சந்திரனின் தரைப்பகுதியில் உள்ள வெப்பம் மற்றும் பௌதீக பண்புகளைகண்டறியும் கருவி, சந்திரனின் அயனி மண்டலம் பற்றிய ஆய்வுகளைமேற்கொள்ளும் உபகரணம், சந்திரனின் மீள் பிரதிபலிப்பு திறனை கண்டறியும்சாதனம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பிரக்யான் ரோவர்
சந்திரனின் தரையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வுமேற்கொள்ளும் பிரக்யான் ரோவர் கருவியில், சந்திரனில் உள்ள தணிமங்களின்அளவு பற்றி கணக்கிடும் ஆல்ஃபா துகள்கள், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், விண்கலம் தரையிறங்கிய இடத்தின் அருகே உள்ள தணிமங்களின் அளவினைக்கணக்கிடும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரில், ஆறு சக்கரங்கள்பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் கருவி, ஒரு விநாடியில் ஒரு சென்டிமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோவர் கருவிசந்திரனில் சுமார் 500 மீட்டர் தூரம் பயணிக்கும். இது சூரியசக்தியை பயன்படுத்தி இயங்குவதோடு, லேண்டர் கருவியோடு தொடர்பு கொண்டு அதற்கு தகவல்களைஅனுப்பும்.
விக்ரம் கருவி ஒரு நிலவுநாள், அதாவது, பூமியில் 14 நாட்கள் செயல்படும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் பெங்களூரு அருகே பையாலலுவில் உள்ளஇந்திய ஆழ்விண்வெளி கட்டமைப்பு மையத்தோடும், ஆர்பிடெர் மற்றும்பிரக்யான்ரோவர் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்துஅனுப்பும்.
சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, அதன் வேகம் ஒரு செகண்டுக்குஇரண்டு மீட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டு, மிகவும் மென்மையான வகையில்சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கும். சந்திரனின் தென்துருவப் பகுதியில் உள்ளமன்சினஸ்-சி மற்றும் சிம்பெளியஸ்-என் என்ற இரண்டு பள்ளங்களுக்கு இடையேஉள்ள தரைவெளியில் விக்ரம் இறங்கும்.
இதுவரை எந்த நாடும், நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலன் மூலம் ஆய்வுசெய்யாத நிலையில், இந்தியா, சந்திரயான்-2 விண்கலம் மூலம் சந்திரனின்தென்துருவப் பகுதியில் ஆய்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதனால், சந்திரனைப் பற்றிய புரிதல்கள் மேலும் மேம்படுவதோடு, வருங்காலத்தில் சந்திரன்மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் விண்வெளியில் ஆய்வினை மேற்கொள்ளஉதவுவதோடு, வருங்கால சந்ததியினரும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளஉதவும்.
சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 ராக்கெட் அனைத்தும்நவீன தொழில்நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்.
ஏற்கனவே அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகியநாடுகள், நிலவில் மென்மையாக விண்கலங்களை தரையிறக்கியுள்ள நிலையில், இந்த சாதனையை படைக்கவுள்ள நான்காவது நாடு இந்தியா என்பதும்குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம்செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (சுமார் ஆயிரம்கோடி ரூபாய்) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1ராக்கெட், இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில் செலுத்தும் திறன்கொண்டது இந்த ராக்கெட்.
43.43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை640 டன். இந்த ராக்கெட் மூன்று பகுதிகளைக் கொண்டது. அடியில் உள்ள முதல்பகுதியில் நிரப்பப்பட்டு இருந்த திரவ எரிபொருள் எரியூட்டப்பட்டு, அது அதிர்வோடுராக்கெட்டை உந்தி மேலே எழும்பச் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதுபகுதியில் உள்ள திட எரிபொருள் எரியூட்டப்பட்டு, ராக்கெட் சந்திரயான்-2 விண்கலத்தை சுமார் 170 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்றது.
அதற்கு மேல் மூன்றாவது அடுக்கில் உள்ள கிரையோஜெனிக் எரிபொருள்எரியூட்டப்பட்டு, ராக்கெட் விண்கலத்துடன் 176 கிலோ மீட்டர் உயரத்திற்குகொண்டு செல்லப்பட்டு, பின்னர், 181 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்,சந்திரயான் விண்கலத்தை பிரித்து அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் திரு. கே.சிவன், இன்றைய தினம் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார்.
சந்திரனின் தென்துருவத்தில் இதுவரை கண்டறியப்படாதவற்றை கண்டறிவதற்கான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இதுவொரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளி அரங்கில் இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என்றார்.
கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு, 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். எனினும், அடுத்த ஒன்றரை நாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட திரு. கே. சிவன், ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 செலுத்துவாகனத்தை வெற்றிகரமாக செலுத்த கடின உழைப்பை வழங்கிய இஸ்ரோவின் அனைத்துப் பிரிவினருக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பழுது நீக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, இதற்கு முந்தைய ஜிஎஸ்எல்வி செலுத்துவாகனத்தின் செயல்பாடுகளைவிட, இன்று செலுத்தப்பட்ட வாகனத்தின் செயல்திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 6,000 கிலோமீட்டர் இயங்கத் தேவையான எரிபொருள் கிடைத்திருப்பதன் மூலம், விண்கலத்தின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்படுவதை இஸ்ரோவும், இந்தியாவும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் கொடி மேலும் உயரப் பறக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் திரு. சிவன் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக கார்ட்டோ-3 உள்ளிட்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 23 நாட்களுக்கு சந்திரயான்-2 விண்கலம் பூமியை அதன்நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும். பூமிக்கு அருகாமையில் வரும் போது, அதில்உள்ள என்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயான் நீள்வட்டப் பயணப்பாதையின் தூரம்படிப்படியாக அதிகரிக்கப்படும். 23-வது நாள் இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்புவிசைப்பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள்மேற்கொள்ளப்பட்டு, 30ஆவது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்டப்பாதையில்சுற்றிவரும் வகையில் இயக்கப்படும். அதனை தொடர்ந்து சுமார் 13 நாட்கள்விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 43-வது நாள் விண்கலத்தின்இரண்டு பகுதிகளான ஆர்பிடெரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர், ஆர்பிடெர்சந்திரனை 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும். ஆர்பிடெரிலிருந்துபிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கிசெலுத்தப்படும். 48-வது நாள் விக்ரம் சந்திரனில் மென்மையாக தரையிறங்கும்.
ஆர்பிடெர்
Orbiter
Weight 2,379 kg
Electric Power Generation Capability 1,000 W
ஆர்பிடெர், சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வு செய்து, பூமிக்கும், சந்திரனில்இறங்கும் விக்ரம் லேண்டருக்கும் தொடர் தகவல்களை அளிக்கும். 682 கிலோஎடைகொண்ட ஆர்பிடெரில் உள்ள எரிபொருளின் எடை 1697 கிலோவாகும். மொத்தஎடை 2379 கிலோவாகும்.
சந்திரனின் தரைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கான பல கருவிகள்ஆர்பிடெரில் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரனை 100 கிலோமீட்டர் உயரத்தில்துருவப் பகுதியின் வழியாக சுற்றிவரும் இந்த ஆர்பிடெரில் சந்திரனின் தரைப்பகுதியை படம் பிடிக்கும் கேமரா, அதிலுள்ள தனிமங்களின் அளவைக் கணக்கிடும்எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சந்திரனில் உறைபனி இருப்பதை உறுதிப்படுத்தும்புகைப்படம் எடுப்பதற்கான கருவி, துருவப் பகுதிகளை படம் பிடிக்கும் கருவி, சந்திரனின் வளி மண்டலத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்ப்ளோரர்-2 கருவி உள்ளிட்டபல கருவிகள் இடம்பெற்றுள்ளன.
விக்ரம் லேண்டர்
சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரின் எரிபொருள் உட்பட மொத்த எடை1471 கிலோவாகும். விக்ரம் லேண்டரிலிருந்து சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வுசெய்யும் பிரக்யான் ரோவர் கருவியின் எடை 27 கிலோவாகும்.
விக்ரம் லேண்டரில் சந்திரனில் ஏற்படக் கூடிய அதிர்வுகளை கண்டுபிடிக்கும்கருவி, சந்திரனின் தரைப்பகுதியில் உள்ள வெப்பம் மற்றும் பௌதீக பண்புகளைகண்டறியும் கருவி, சந்திரனின் அயனி மண்டலம் பற்றிய ஆய்வுகளைமேற்கொள்ளும் உபகரணம், சந்திரனின் மீள் பிரதிபலிப்பு திறனை கண்டறியும்சாதனம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பிரக்யான் ரோவர்
சந்திரனின் தரையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வுமேற்கொள்ளும் பிரக்யான் ரோவர் கருவியில், சந்திரனில் உள்ள தணிமங்களின்அளவு பற்றி கணக்கிடும் ஆல்ஃபா துகள்கள், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், விண்கலம் தரையிறங்கிய இடத்தின் அருகே உள்ள தணிமங்களின் அளவினைக்கணக்கிடும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரில், ஆறு சக்கரங்கள்பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் கருவி, ஒரு விநாடியில் ஒரு சென்டிமீட்டர்தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோவர் கருவிசந்திரனில் சுமார் 500 மீட்டர் தூரம் பயணிக்கும். இது சூரியசக்தியை பயன்படுத்திஇயங்குவதோடு, லேண்டர் கருவியோடு தொடர்பு கொண்டு அதற்கு தகவல்களைஅனுப்பும்.
விக்ரம் கருவி ஒரு நிலவுநாள், அதாவது, பூமியில் 14 நாட்கள் செயல்படும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் பெங்களூரு அருகே பையாலலுவில் உள்ளஇந்திய ஆழ்விண்வெளி கட்டமைப்பு மையத்தோடும், ஆர்பிடெர் மற்றும்பிரக்யான்ரோவர் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்துஅனுப்பும்.
சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, அதன் வேகம் ஒரு செகண்டுக்குஇரண்டு மீட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டு, மிகவும் மென்மையான வகையில்சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கும். சந்திரனின் தென்துருவப் பகுதியில் உள்ளமன்சினஸ்-சி மற்றும் சிம்பெளியஸ்-என் என்ற இரண்டு பள்ளங்களுக்கு இடையேஉள்ள தரைவெளியில் விக்ரம் இறங்கும்.
இதுவரை எந்த நாடும், நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலன் மூலம் ஆய்வுசெய்யாத நிலையில், இந்தியா, சந்திரயான்-2 விண்கலம் மூலம் சந்திரனின்தென்துருவப் பகுதியில் ஆய்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதனால், சந்திரனைப் பற்றிய புரிதல்கள் மேலும் மேம்படுவதோடு, வருங்காலத்தில் சந்திரன்மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் விண்வெளியில் ஆய்வினை மேற்கொள்ளஉதவுவதோடு, வருங்கால சந்ததியினரும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளஉதவும்.
சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 ராக்கெட் அனைத்தும்நவீன தொழில்நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்.
ஏற்கனவே அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகியநாடுகள், நிலவில் மென்மையாக விண்கலங்களை தரையிறக்கியுள்ள நிலையில், இந்த சாதனையை படைக்கவுள்ள நான்காவது நாடு இந்தியா என்பதும்குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம்செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (சுமார் ஆயிரம்கோடி ரூபாய்) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்துசந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் இரண்டு மணி 43 நிமிடங்களுக்குஜிஎஸ்எல்வி–மார்க்-3 எம்-1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது.
சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1ராக்கெட், இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில் செலுத்தும் திறன்கொண்டது இந்த ராக்கெட்.
43.43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை640 டன். இந்த ராக்கெட் மூன்று பகுதிகளைக் கொண்டது. அடியில் உள்ள முதல்பகுதியில் நிரப்பப்பட்டு இருந்த திரவ எரிபொருள் எரியூட்டப்பட்டு, அது அதிர்வோடுராக்கெட்டை உந்தி மேலே எழும்பச் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதுபகுதியில் உள்ள திட எரிபொருள் எரியூட்டப்பட்டு, ராக்கெட் சந்திரயான்-2 விண்கலத்தை சுமார் 170 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்றது.
அதற்கு மேல் மூன்றாவது அடுக்கில் உள்ள கிரையோஜெனிக் எரிபொருள்எரியூட்டப்பட்டு, ராக்கெட் விண்கலத்துடன் 176 கிலோ மீட்டர் உயரத்திற்குகொண்டு செல்லப்பட்டு, பின்னர், 181 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்,சந்திரயான் விண்கலத்தை பிரித்து அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் திரு. கே.சிவன், இன்றைய தினம் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார்.
சந்திரனின் தென்துருவத்தில் இதுவரை கண்டறியப்படாதவற்றை கண்டறிவதற்கான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இதுவொரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளி அரங்கில் இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என்றார்.
கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு, 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். எனினும், அடுத்த ஒன்றரை நாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட திரு. கே. சிவன், ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 செலுத்துவாகனத்தை வெற்றிகரமாக செலுத்த கடின உழைப்பை வழங்கிய இஸ்ரோவின் அனைத்துப் பிரிவினருக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பழுது நீக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, இதற்கு முந்தைய ஜிஎஸ்எல்வி செலுத்துவாகனத்தின் செயல்பாடுகளைவிட, இன்று செலுத்தப்பட்ட வாகனத்தின் செயல்திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 6,000 கிலோமீட்டர் இயங்கத் தேவையான எரிபொருள் கிடைத்திருப்பதன் மூலம், விண்கலத்தின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்படுவதை இஸ்ரோவும், இந்தியாவும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் கொடி மேலும் உயரப் பறக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் திரு. சிவன் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக கார்ட்டோ-3 உள்ளிட்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 23 நாட்களுக்கு சந்திரயான்-2 விண்கலம் பூமியை அதன்நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும். பூமிக்கு அருகாமையில் வரும் போது, அதில்உள்ள என்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயான் நீள்வட்டப் பயணப்பாதையின் தூரம்படிப்படியாக அதிகரிக்கப்படும். 23-வது நாள் இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்புவிசைப்பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள்மேற்கொள்ளப்பட்டு, 30ஆவது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்டப்பாதையில்சுற்றிவரும் வகையில் இயக்கப்படும். அதனை தொடர்ந்து சுமார் 13 நாட்கள்விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 43-வது நாள் விண்கலத்தின்இரண்டு பகுதிகளான ஆர்பிடெரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர், ஆர்பிடெர்சந்திரனை 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும். ஆர்பிடெரிலிருந்துபிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கிசெலுத்தப்படும். 48-வது நாள் விக்ரம் சந்திரனில் மென்மையாக தரையிறங்கும்.
ஆர்பிடெர்
ஆர்பிடெர், சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வு செய்து, பூமிக்கும், சந்திரனில்இறங்கும் விக்ரம் லேண்டருக்கும் தொடர் தகவல்களை அளிக்கும். 682 கிலோஎடைகொண்ட ஆர்பிடெரில் உள்ள எரிபொருளின் எடை 1697 கிலோவாகும். மொத்தஎடை 2379 கிலோவாகும்.
சந்திரனின் தரைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கான பல கருவிகள்ஆர்பிடெரில் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரனை 100 கிலோமீட்டர் உயரத்தில்துருவப் பகுதியின் வழியாக சுற்றிவரும் இந்த ஆர்பிடெரில் சந்திரனின் தரைப்பகுதியை படம் பிடிக்கும் கேமரா, அதிலுள்ள தனிமங்களின் அளவைக் கணக்கிடும்எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சந்திரனில் உறைபனி இருப்பதை உறுதிப்படுத்தும்புகைப்படம் எடுப்பதற்கான கருவி, துருவப் பகுதிகளை படம் பிடிக்கும் கருவி, சந்திரனின் வளி மண்டலத்தை ஆய்வு செய்யும் எக்ஸ்ப்ளோரர்-2 கருவி உள்ளிட்டபல கருவிகள் இடம்பெற்றுள்ளன.
விக்ரம் லேண்டர்
சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரின் எரிபொருள் உட்பட மொத்த எடை1471 கிலோவாகும். விக்ரம் லேண்டரிலிருந்து சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வுசெய்யும் பிரக்யான் ரோவர் கருவியின் எடை 27 கிலோவாகும்.

விக்ரம் லேண்டரில் சந்திரனில் ஏற்படக் கூடிய அதிர்வுகளை கண்டுபிடிக்கும்கருவி, சந்திரனின் தரைப்பகுதியில் உள்ள வெப்பம் மற்றும் பௌதீக பண்புகளைகண்டறியும் கருவி, சந்திரனின் அயனி மண்டலம் பற்றிய ஆய்வுகளைமேற்கொள்ளும் உபகரணம், சந்திரனின் மீள் பிரதிபலிப்பு திறனை கண்டறியும்சாதனம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பிரக்யான் ரோவர்

சந்திரனின் தரையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வுமேற்கொள்ளும் பிரக்யான் ரோவர் கருவியில், சந்திரனில் உள்ள தணிமங்களின்அளவு பற்றி கணக்கிடும் ஆல்ஃபா துகள்கள், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், விண்கலம் தரையிறங்கிய இடத்தின் அருகே உள்ள தணிமங்களின் அளவினைக்கணக்கிடும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரில், ஆறு சக்கரங்கள்பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் கருவி, ஒரு விநாடியில் ஒரு சென்டிமீட்டர்தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோவர் கருவிசந்திரனில் சுமார் 500 மீட்டர் தூரம் பயணிக்கும். இது சூரியசக்தியை பயன்படுத்திஇயங்குவதோடு, லேண்டர் கருவியோடு தொடர்பு கொண்டு அதற்கு தகவல்களைஅனுப்பும்.
விக்ரம் கருவி ஒரு நிலவுநாள், அதாவது, பூமியில் 14 நாட்கள் செயல்படும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் பெங்களூரு அருகே பையாலலுவில் உள்ளஇந்திய ஆழ்விண்வெளி கட்டமைப்பு மையத்தோடும், ஆர்பிடெர் மற்றும்பிரக்யான்ரோவர் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்துஅனுப்பும்.
சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது, அதன் வேகம் ஒரு செகண்டுக்குஇரண்டு மீட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டு, மிகவும் மென்மையான வகையில்சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கும். சந்திரனின் தென்துருவப் பகுதியில் உள்ளமன்சினஸ்–சி மற்றும் சிம்பெளியஸ்–என் என்ற இரண்டு பள்ளங்களுக்கு இடையேஉள்ள தரைவெளியில் விக்ரம் இறங்கும்.
இதுவரை எந்த நாடும், நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலன் மூலம் ஆய்வுசெய்யாத நிலையில், இந்தியா, சந்திரயான்-2 விண்கலம் மூலம் சந்திரனின்தென்துருவப் பகுதியில் ஆய்வை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதனால், சந்திரனைப் பற்றிய புரிதல்கள் மேலும் மேம்படுவதோடு, வருங்காலத்தில் சந்திரன்மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் விண்வெளியில் ஆய்வினை மேற்கொள்ளஉதவுவதோடு, வருங்கால சந்ததியினரும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளஉதவும்.
சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 ராக்கெட் அனைத்தும்நவீன தொழில்நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்.
ஏற்கனவே அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகியநாடுகள், நிலவில் மென்மையாக விண்கலங்களை தரையிறக்கியுள்ள நிலையில், இந்த சாதனையை படைக்கவுள்ள நான்காவது நாடு இந்தியா என்பதும்குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம்செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (சுமார் ஆயிரம்கோடி ரூபாய்) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
Like this:
Like Loading...
Related