அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் / TNPSC பொதுத் தமிழ்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
- மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்– சீவக சிந்தாமணி
- தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள்
- செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம். – சிலப்பதிகாரம்
- இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
- நெடுந்தொகை – அகநானூறு
- கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை
- பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை, குண்டலகேசி
- மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம். – மணிமேகலை
- புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு
- வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை
- பாணாறு – பெரும்பாணாற்றுப்படை
- பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு
- புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை
- வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார்
- சின்னூல் என்பது – நேமிநாதம்
- வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை
- திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் – பெரிய புராணம்
- ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம்
- முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி
- கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்
- தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள்
- குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி
- குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
- உழத்திப்பாட்டு – பள்ளு
- இசைப்பாட்டு – பரிபாடல் , கலித்தொகை
- அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை
- தமிழர் வேதம் – திருமந்திரம்
- தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி – திருவாசகம்
- தமிழ் வேதம் – நாலாயிர திவ்ய பிரபந்தம்
- குட்டி தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
- குட்டி திருவாசகம் – திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
- பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் – பிள்ளைத் தமிழ்
- திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை
- புலன் எனும் சிற்றிலக்கிய வகை – பள்ளு
- தூதின் இலக்கணம் – இலக்கண விளக்கம்
- தமிழின் முதற்கலம்பகம் – நந்தி கலம்பகம்
- தமிழர்களின் கருவூலம் – புறநானூறு
- 96 வகை சிற்றிலக்கிய நூல் – சதுரகாதி
- கிருஸ்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி
- தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் , திருக்குறள்
- வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்
- 64 புராணங்களைக் கூறும் நூல் – திருவிளையாடற் புராணம்
- இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
- இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
- இயற்கை இன்ப வாழ்வு நிலையம் – சிலப்பதிகாரம் ஃ மணிமேகலை
- நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
- பாவைப்பாட்டு – திருப்பாவை
- பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
TNPSC GROUP 2 PREVIOUS YEAR QUESTION PDF
TNPSC Group 4 Last 6 Years Old Question Papers