பரிந்திர குமார் கோஷ்
ஸ்ரீ அரவிந்த்கோஷின் இளைய சகோதரரான பரிந்திர குமார் கோஷ், ஜூகாந்தர் என்ற பெங்காலி வார இதழை நடத்தினார். இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
பரிந்திர குமார் கோஷ் (5 ஜனவரி 1880 – 18 ஏப்ரல் 1959)
• ஒரு புரட்சியாளர், பத்திரிக்கையாளர் மற்றும் ஸ்ரீ அரவிந்த கோஷின் இளைய சகோதரர்.
• ஜுகாந்தர் என்ற புரட்சிகர அமைப்பை நிறுவி, ஜுகாந்தர் என்ற பெங்காலி மொழி வார இதழை வெளியிடத் தொடங்கினார்.
அவர் ஜதிந்திரநாத் முகர்ஜி (அல்லது பாகா ஜதின்) உடன் இணைந்து இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.
• மாஜிஸ்திரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டின் மீதான கொலை முயற்சிக்காக கைது செய்யப்பட்டார்.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில், பரிந்திர கோஷ் மற்றும் உல்லாஸ்கர் தத்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் தேஷ்பந்து சித்தரஞ்சன் தாஸின் தலையீட்டால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், பரீந்த்ரா, பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், டைனிக் பாசுமதி மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். • 1959-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி மறைந்தார்.