150 பேரூராட்சி செயல் அலுவலர் காலி பணியிடங்கள்
தமிழகம் முழுவதும் 150 பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்தில் தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சி என மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. இப்பேரூராட்சிகள் அனைத்தும் செயல் அலுவலர்கள் தலைமையில் இயங்கி வருகின்றன. கடந்த 5 ஆண்டு களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசுத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பு அதிகாரியாக உள்ள செயல் அலுவலர்களின் ஒப்புதலோடு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
TNUSRB PC Exam Answer Key 80 Qts – PDF
TNPSC, RRB, TN Forest Watcher, TN SI Video Course
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 150 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக உள்ளாட்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிட பொறுப்புகளை அருகாமையில் உள்ள பேரூராட்சிகளில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு பேரூராட்சி செயல் அலுவலர், 3-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். ஒவ்வொரு பேரூராட்சியிலும் பொது சுகாதாரம், வடிகால் பராமரிப்பு, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு திட்டம், மரக்கன்றுகள் நடும் பணி, அலுவலக நிர்வாகம்; இதுதவிர மாவட்ட அளவில் நடைபெறும் நிர்வாக கூட்டங்கள், மக்கள் பிரச்னைகள் என பல்வேறு பணிகளை கூடுதலாக பார்க்கும் செயல் அலுவலர்கள் அவற்றை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். வாரத்திற்கு 2 நாள்கள் மட்டுமே கூடுதல் பணியை பார்க்க நேரிடுவதால், மற்ற நாள்களில் அங்கு கோரிக்கை, புகார் மற்றும் பிற தேவைகளை நிறைவேற்ற வரும் பொதுமக்கள் அதிகாரிகளின்றி திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிறப்பு, இறப்பு, புதிய வீடு கட்டும் பயனாளிகள், வீட்டுமனைகளுக்கு உரிமம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறமுடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, மாநில அரசு காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
PC – பொதுஅறிவு 50 வினாக்களுக்கான விடைகள்
PC – உளவியல் 30 வினாக்களுக்கான விடைகள்
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 150 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள பணியிடத்தை கூடுதலாக கவனிக்க உத்தரவிடுகிறது.
கூடுதல் பணி செய்ய மறுக்கும் செயல் அலுவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்பட்டு அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதால் இரண்டு, மூன்று பேரூராட்சிகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
TNPSC, RRB, TN Forest, TN SI Test Batch Latest News
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு, நிர்வாகக் காரணங்கள், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
TNUSRB PC Exam Answer Key 80 Qts – PDF
பொதுஅறிவு 50 வினாக்களுக்கான விடைகள்
உளவியல் 30 வினாக்களுக்கான விடைகள்
TNUSRB PC Answer Key 2019 – Part B 30 Questions
TNPSC, RRB, TN Forest Watcher, TN SI Video Course
TNPSC, RRB, TN Forest, TN SI Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.