Tamil Nadu 6th Standard New ஆசாரக்கோவை Tamil Book Term 2
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 2 ஆசாரக்கோவை Book Back Answers
பாடறிந்து ஒழுகுதல்
I. சொல்லும் பொருளும்
- நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
- நட்டல் – நட்பு கொள்ளுதல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறரிடம் நான் _______ பேசுவேன்.
- கடுஞ்சொல்
- இன்சொல்
- வன்சொல்
- கொடுஞ்சொல்
விடை : இன்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.
- வம்பு
- அமைதி
- அடக்கம்
- பொறை
விடை : பொறை
3. அறிவு + உடைமை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- அறிவுடைமை
- அறிவுஉடைமை
- அறியுடைமை
- அறிஉடைமை
விடை : அறிவுடைமை
4. இவை + எட்டும் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- இவைஎட்டும்
- இவையெட்டும்
- இவ்வெட்டும்
- இவ்எட்டும்
விடை : இவையெட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நன்றி + யறிதல்
- நன்றி + அறிதல்
- நன்று + அறிதல்
- நன்று + அறிதல்
விடை : நன்றி + அறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பொறுமை + உடைமை
- பொறை + யுடைமை
- பொறு + யுடைமை
- பொறை + உடைமை
விடை : பொறை + உடைமை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசாரக்கோவையில் ஆசிரியர் _______________________
- பாரதிதாசன்
- ஒளவையார்
- பெருவாயின் முள்ளியார்
- கவிமணி
விடை : பெருவாயின் முள்ளியார்
2. _______________________ மறக்கக் கூடாது
- பிறர் செய்த தீங்கினை
- பிறர் செய்த கொடுமையை
- பிறர் கூறிய தீயசொற்களை
- பிறர் செய்த உதவியை
விடை : பிறர் செய்த உதவியை
3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _______________________
- இரு நூறு
- நானூறு
- முந்நூறு
- நூறு
விடை : நூறு
4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _______________________
- பாளையங்கோட்டை
- வயநாடு
- மதுரை
- கயத்தூர்
விடை : கயத்தூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஆசாரக்கோவை ______________ நூல்களுள் ஒன்று.
விடை : பதினெண்கீழ்கணக்கு
2. நட்டல் என்பதன் பொருள் ______________
விடை : நட்புக் கொள்ளுதல்
3. நல்லொழக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை ______________
விடை : எட்டு