Site icon Athiyaman team

Daily Current Affairs – 2019 April 21 to 25 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(April 2019 – 21 to 25)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  21 to 25 April 2019

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

மான்டே  கார்லோ டென்னிஸ்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019

ஆசிய பளுதூக்கும் போட்டி

சந்தோஷ் டிராபி 2019

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

குண்டு எறிதல்

ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  

ஈட்டி எறிதல்

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 60.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

ஹர்டில்ஸ் போட்டி

ஜபிர் மடரி பல்லியாலில் மற்றும் சரிதா கயக்வத் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

ஸ்டீபிள்சேஸ் பிரிவு

ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சப்லே 8 நிமிடம், 30.19 வ��நாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.

தடை ஓட்டம்

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலம் பெற்றனர்.

 

முக்கியமான நாட்கள்

 

ஏப்ரல் 21 – தேசிய குடிமை பணிகள் தினம்

ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. தனி நபர், குழு மற்றும் அமைப்பு என்ற அடிப்படையில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்திய குடிமைப் பணியின் தந்தை என அழைக்கப்படுபவர் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஆவார்.

ஏப்ரல் 21 -உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமானது (WCID – World Creativity and Innovation Day) அனுசரிக்கப்படுகின்றது.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் படைப்பாற்றல் மூலம் தீர்வு காண்பதற்கு வேண்டி மக்களுக்கு உதவுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று முதலாவது WCID தினமானது ஐ.நா.வினால் அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 22 – உலக புவி தினம்

கலிபோர்னியாவின் கடற்கரையிலிருந்து 3500 க்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்ட 1969 சாண்டா பார்பரா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்த அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவை நிரூபிக்க முதல் புவி தினத்தை உருவாக்கினார். 2019 தீம் : ‘Protect Our Species’

ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day )

முதன் முதலாகக் இந்த தினம் 1995-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என அந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று யுனெஸ்கோ (UNESCO) அமைப்பும், பிற சர்வதேச அமைப்புகளும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியை உலக புத்தக தலைமையகமாக (World Book Capital)  ஓர் ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கும்.

இந்த வகையில், யுனெஸ்கோ அமைப்பானது 2018-ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் (Athens)  நகரை உலக புத்தக தலைநகராக (World Book Capital for 2018) அறிவித்துள்ளது.

உலக புத்தக தலைநகரம் 2019 : ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம் (English Language Day)

ஐ.நா.வால் ஆங்கில மொழி தினம் ஏப்ரல் 23 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறந்த மற்றும் பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது தகவல் துறையால் 2010 ஆம் ஆண்டில், ஐ.நா.சபையில் உள்ள 6 அலுவலக மொழிகளுக்கும் மொழி தினம் கொண்டாட வேண்டும் என்பதன் விளைவாக இந்த ஆங்கில மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 24 – உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019 (World Day For Animals In Laboratories அல்லது World Lab Animal Day)

உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ  உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தனர்.

ஏப்ரல் 24 -தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ( National Local Self-Government day )

ஏப்ரல் 25 – தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம்(International Girls in ICT Day)

ஏப்ரல் 25 -உலக மலேரியா தினம்( World Malaria Day-WMD )  

2019 தீம் : Zero malaria starts with me”.

நிழல் இல்லாத தினம்

அறிவியல் செய்திகள்

 

புரதங்களை உயிரணுக்களில் செலுத்துதல்

பெங்களூருவின் இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் (IISC) புரதங்களை நேரடியாக பாலூட்டிகளின் அணுவுக்குள் செலுத்தும் ஒரு நாவல் முறையை கையாண்டுள்ளனர். புரதங்கள் பெரிய மூலக்கூறுகள் ஆகையால் அவை அணுகளுக்குள் தானாக உள்ளே நுழைய முடியாது. ஆகையால் கோவிந்தசாமி முகேஷ் தலைமையிலான குழு புரதத்தில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கு பதிலாக ஒரு அயோடின் அணுவை சேர்த்துள்ளது, இதன் மூலம் அணுக்களில் உள்ள புரதம் ஆறு மடங்கு அதிகரிக்கிறது.

 

நியமனங்கள்

 

இந்தியா ட்விட்டரின் புதிய  நிர்வாக இயக்குநராக (MD) திரு மனிஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

மனிஷ் மஹேஷ்வரி இதற்கு முன்பு நெட்வொர்க்18 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார்.

உலக செய்திகள்

 

உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியல் – அருணாச்சலம் முருகானந்தம்

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.தங்கள் தயாரிப்பின் மூலம் சமூக மாற்றத்தையும், வித்தியாசத்தையும் கொண்டு வந்த வர்த்தக நிறுவனங்களை தேர்வு செய்து இந்த பட்டியலை ஃபார்ட்யூன் வெளியிடுகிறது.

அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் நாப்கினை தயாரித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு, பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அதுமட்டுமல்லாமல், இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி ‘பேட்மேன்’ என்கிற பெயரில் திரைப்படமாக‌ எடுத்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரி நிலங்கள்

அண்மையில் கென்யாவில் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் கூடுகையில் (United Nations Environment Assembly) கரிநிலம் மீதான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கரிநிலம் என்பது ஒருவகை சதுப்பு நிலமாகும்.

இது கரி மண் மற்றும் அதன் மேல் வளரும் சதுப்புநில வாழிடத்தைக் குறிக்கின்றது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- April – 21 to 25]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Exit mobile version