Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(6 Sep 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 6 Sep 2019
நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
அரசு வழக்கறிஞராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமனம்
சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை, அரசு வக்கீல்கள் நியமனம் விதிகள் 2017-ன் கீழ், அரசு வழக்கறிஞர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்ய ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர் பதவிக்கு வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் திருவண்ணாமலை மாவட்டம், பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்.
ஒப்பந்தங்கள்
இந்தியா – ரஷ்யா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இந்தியா, ரஷியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்துயிடப்பட்டது .
- அதன்படி ரஷியாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
- மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் ரஷிய எரிசக்திதுறை அமைச்சகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கூட்டறிக்கை:
- பிரதமர் மோடி-அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பிலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகவும் இந்தியா இடம்பெற ரஷியா ஆதரவளிக்கிறது.
தேசிய செய்திகள்
காந்தி நினைவு அஞ்சல்தலை
- மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி, அவரது நினைவாக சிறப்பு அஞ்சல்தலையை வெளியிடுகிறது ரஷியா. ரஷியா நாட்டுக்கான இந்தியத் தூதர் டி.பி.வெங்கடேஷ் வர்மா கூறினார்.
ககன்யான் வீரர்களுக்கு ரஷியா பயிற்சி
- இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை, 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தும். இந்த விண்கலத்தில் செல்லவிருக்கும் இந்திய விண்வெளி வீரர்கள், ரஷியாவில் பயிற்சி பெற உள்ளனர்.
5 ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று
- சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ISO:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
- தேசிய பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதல்களை பின்பற்றி, சுத்தமான குடிநீர், மின்சார சிக்கனம், பல வண்ணங்களில் குப்பை தொட்டிகளை வைத்தல், மழை நீரை சேமித்தல் என பல்வேறு அம்சங்களை கடைப்பிடித்ததை அடுத்து 5 ரயில் நிலையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வ.உ.சி நீதிமன்றம்
ஆங்கிலேயர் காலத்தில் ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடிய வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் அன்று அவரது பெயரில் ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி நீதிமன்றம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
ரஷ்ய கிழக்கு பகுதி மேம்பாட்டுக்கு இந்தியா 7 ஆயிரம் கோடி கடன்
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அங்கு கிழக்கு பொருளாதார குழு 5 வது மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட மோடி, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில், இந்தியாவின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான, கொள்கை திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தின்படி, ரஷ்யாவின் கிழக்கு பகுதி மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனுதவி அளிக்கும் என அவர் அறிவித்தார்.
ரஷ்ய அதிபர்- புதின்
திட்டம்
ஐ.டி. துறையில் டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம்
- தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) முதலீட்டை ஈர்க்க, டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் கே. பழனிசாமி தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் சான் ஹீசே நகரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் மொத்தம் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு சுமார் ரூ.2,300 கோடி முதலீடு தமிழகத்துக்கு பெறப்பட்டுள்ளது.
விருது
தேசிய நல்லாசிரியர் விருது
- ஆசிரியர் தினம், தேசிய நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 46 பேர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்.
- அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில்
தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.செல்வக்கண்ணன் கோபிச்செட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன்சூர் அலி
புதுச்சேரி கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் எஸ். சசிக்குமார்.
ஒப்பந்தம்
சென்னைத் துறைமுகம் மூலம் கார்களை ஏற்றுமதி செய்ய புதிய ஒப்பந்தம்
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் செயல்பட்டு வரும் தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்திட்டது.
விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்
- ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர்.
- 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா.
யுஎஸ் ஓபன் போட்டி
- யுஎஸ் ஓபன் போட்டியில் 2009-க்குப் பின்அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் 19 வயது இளம்பெண் என்ற பெருமையை கனடாவின் பியான்கா ஆன்ட்ரிஸ்கு பெற்றுள்ளார்.டொரண்டோ நகரைச் சேர்ந்த 19 வயதான பியான்கா 25-ஆவது நிலை வீராங்கனை மெர்டென்ஸை வீழ்த்தினார்.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Sep -6 ]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
