Athiyaman team

அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

 அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

வீட்டிற்கோர்  புத்தகசாலை

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.

 அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

    1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

    2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.

 

    3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

    4. சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.

    5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; 

 தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.

    6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.

    7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.

    8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.

    9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

    10. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.

  11. வாழ்க்கையில் அடிப்படைத்  தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!

 

Download TNPSC App

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே

Exit mobile version