Daily Current Affairs (1- April 2019)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 1 April 2019
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி
சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிப் போட்டியில் வலுகுறைந்த கொரிய அணியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
இதனால் இந்தியாவுக்கு வெள்ளிபதக்கம் கிடைத்தது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார்.செக்.குடியரசின் 5-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 7-6. 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி.
ஆசிய ஏர்கன் (AirGun) சாம்பியன்ஷிப்
இதுவரை 14 தங்கப் பதக்கங்களில் 12 தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது, மற்றும் நான்கு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது. திவ்யாஞ் சிங் பன்வார் மற்றும் இளவெனில் வளறிவன் 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.
பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ்
ஐந்து முறை உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் அணிக்காக பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார். வால்டெரி போடாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஆஸ்திரேலியா பாக்கிஸ்தான் ஒருநாள் தொடர்
இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
மாநில செய்திகள்
ஒடிசா உருவாக்க தினம்
ஒடிசா அதன் உருவாக்க தினத்தின் 84வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. 1936 ல் ஒடிசா மாகாணத்தை உருவாக்குவதற்காக மக்கள் செய்த தியாகங்களை நினைவுகூறும் நாள் ‘உக்கல் திவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன், மொழியியல் அடிப்படையில் உருவான முதல் மாநிலம் ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது . 1936 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஒடிசா பீகாரில் ஒரு பகுதியாக இருந்தது.ஒடிசா பரப்பளவில் 9 வது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகையில் 11 வது மிகப்பெரிய இடமாகவும் உள்ளது.
தலைநகரம் : புவனேஸ்வர்
முதல்வர் : நவீன் பட்நாயக்
தேசிய செய்திகள்
ஏப்ரல் 1 ம் தேதி முதல் MGNREGA ஊதிய விகிதம்
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 1 ல் இருந்து 100 நாள் (MGNREGA) வேலை திட்டத்தின் கீழ் ஊதியங்களை மீளமைக்க கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) கீழ் வழங்கப்பட்ட ஊதியங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு (CPI-AL) நுகர்வோர் விலை குறியீட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன மற்றும் புதிய ஊதிய விகிதங்கள் புதிய நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 1 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் புதிய சகாப்தம் ரெய்வா
ஜப்பானில் புதிய பேரரசர் பதவியேற்க உள்ளதையடுத்து, அவருடைய ஆட்சிக் காலமான புதிய சகாப்தம், ரெய்வா என அழைக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக அரியணை துறப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக வரும் மே மாதம் 1-ஆம் தேதி முடிசூட உள்ளார். இதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய சகாப்தம் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் புதிய சகாப்தத்தின் பெயரை முடிவு செய்வதற்காக, அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டம், தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், புதிய சகாப்தத்துக்கு ரெய்வா என்று பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இந்தச் சொல்லுக்கு நல்லிணக்கம் என்பது பொருளாகும்.
200 ஆண்டுகளில் ஏசிட்டோ பேரரசர் ஏப்ரல் 30 அன்று பதவியில் இருந்து இறங்கவுள்ளார் இதுவே “Heisei” சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரவுள்ளது.
ஆதாருடன் பான் (PAN) எண் இணைப்பு
மத்திய அரசு ஆதாருடன் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண் (PAN) ஐ இணைக்கம் கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை ஆறு மாதங்கள் நீட்டித்துள்ளது.
வணிகம்
விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப் பரோடா இணைவு
தேனா வங்கியும், விஜய வங்கியும் வங்கியின் பரோடாவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இது இந்தியாவின் வங்கித் துறையில் முதல் மூன்று வழிகளில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை பேங்க் ஆப் பரோடா (BoB) உடன் இணைத்து , ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி ஆகியவற்றிற்கு பின்னர் நாட்டின் மூன்றாவது பெரிய கடன் வழங்கும் வங்கியாக உருவாக்கப்பட உள்ளது.
அறிவியல் செய்திகள்
PSLV-C45
- பூமியின் மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய சாதனை.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவன் விண்வெளி
- எமிசாட் செயற்கைக்கோள் விண்வெளியில் மின்காந்த அளவினை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. இந்த கருவியினை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- Lithuania (2), Spain (1), Switzerland (1) and USA (24).
- அமெரிக்காவின் சார்பில் செலுத்தப்பட்டுள்ள 24 செயற்கைக்கோள்களில் 4-ஏ தொகுதி என்று பெயரிடப்பட்டுள்ள 20 செயற்கைக்கோள்கள் பூமியை கண்காணித்து தகவல் அனுப்புவதற்காக அமெரிக்கா வடிவமைத்துள்ளது.
- இவை தவிர, கப்பல்களை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் லெமுர் என்று பெயரிடப்பட்டுள்ள தொகுதியில் நான்கு செயற்கைக்கோள்களை அமெரிக்கா வடிவமைத்துள்ளது.
- சுவிட்சர்லாந்தின் ஆஸ்ட்ரோகேஸ்ட்-2 செயற்கைக்கோள் இணையதள தொழில்நுட்ப பணிக்காகவும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அயிஸ்டெக் செயற்கைக்கோள், விமானங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவும் செலுத்தப்பட்டுள்ளது.
- ஆயுதப்படைகளுக்கு உளவுத்துறை விவரங்களை வழங்கம் செயற்கைகோள் EMISATஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) ஸ்ரீஹரிகோட்டை விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தியது.
- PSLV-C45 EMISAT ஐ 748 கி.மீ. சுற்றுப்பாதையிலும் மற்றும் 28 பிற செயற்கைக்கோள்களை 504 கிமீ சுற்றுப்பாதையிலும் வெற்றிகரமாக செலுத்தியது.
நாசாவின் செவ்வாய் வானூர்தி (ஹெலிகாப்டர்) விமான சோதனை
நாசாவின் செவ்வாய் ஹெலிகாப்டர், மெல்லிய வளிமண்டலத்தில் குறைந்த புவியீர்ப்புடன் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தனது விமான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து.
2020 ஆம் ஆண்டில் சிவப்பு கோல் (Red Planet) பயணத்திற்கு பயணிக்க தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் 2021 பிப்ரவரி மாதம் சிவப்பு கோல் (Red Planet) மேற்பரப்பில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
நியமனம்
ஸ்லோவாக்கியாவின் புதிய ஜனாதி
ஸ்லோவாக்கியாவின் புதிய ஜனாதிபதியாக ஸுஸானா கப்புடோவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்
Capital :- Bratislava
Download Daily Current Affairs [2019- April -1]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
