தமிழ்த்தாத்தா உ.வே.சா.
* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
* ஊர் – திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
JOIN GROUP 4 TEST BATCH- ONLINE TEST SERIES WHATSAPP 8681859181

* இயற்பெயர் – வேங்கடரத்தினம்
* ஆசிரியர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் – சாமிநாதன்
* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
* இவரின் தந்தை – வேங்கடசுப்பையா
* காலம் – 19.02.1855 முதல் 28.04.1942
* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.
* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
* குறிஞ்சிப்பாட்டு – பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் – உ.வே.சா
* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.
* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை – தொண்ணூற்று ஒன்பது
* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை – 8
பத்துப்பாட்டு – 10
சீவகசிந்தாமணி – 1
சிலப்பதிகாரம் – 1
மணிமேகலை – 1
புராணங்கள் – 12
உலா – 9
கோவை – 6
தூது – 6
வெண்பா நூல்கள் – 13
அந்தாதி – 3
பரணி – 2
மும்மணிக்கோவை – 2
இரட்டைமணிமாலை – 2
பிற பிரபந்தங்கள் – 4