தமிழ் வினா – விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

தமிழ் வினா – விடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா

 

 

* உ.வே.சா – உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.

* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் – சாமிநாதன்.

* உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.

* உ.வே.சாவின் காலம் – 19.02.1855 முதல் 24.04.1942 வரை

* உ.வே.சாவின் ஆசிரியர் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.

* உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல் நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

* உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.

* உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.

* உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் – சங்கராச்சாரியார்.

* உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் “என் சரிதம்” (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

* உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்து படித்து புதுப்பித்தார்.

* குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் – கபிலர்.

* குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று – பத்துப்பாட்டு

* கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

* உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.

* 2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:

எட்டுத்தொகை – 8

பத்துப்பாட்டு – 10

சீவக சிந்தாமணி – 1

மணிமேகலை – 1

சிலப்பதிகாரம் – 1

புராணங்கள் – 12

உலா – – 9

கோவை – 6

தூது – 6

வெண்பா நூல்கள் – 13

அந்தாதி – 3

பரணி – 2

மும்மணிக்கோவை – 2

இரட்டைமணிமாலை – 2

பிற பிரபந்தஸ்கள் – 4

 

* ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை.

* ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு.

* ஜப்பானில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் – ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடகோ சசாகி.

* சடகோ சசாகிக்கு நம்பிக்கை தந்தவர் – தோழி சிசுகோ

* அக்குழந்தையின் நினைவிடம் உள்ள இடம்: ஹிரோசிமா நகரம்.

* அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் – டென் லிட்டில் பிங்கர்ஸ்

* அவள் இறக்கும் முன் 644 காகித கொக்குகள் செய்தார்.

* டென் லிட்டில் பிங்கர்ஸ்(Ten Little Fingers) என்ற நூலை எழுதியவர்: அரவிந்த் குப்தா.

* உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச்சுவடியை தேடி எடுத்த இடம் – கொடுமுடி(ஈரோடு மாவட்டம்)

* “பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்”-அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் ஓலைச்சுவடி.

* ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது -புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.

இலக்கணம்:

* நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது – இலக்கணம்.

* தமிழின் முதல் எழுத்து – அ

* “அ” என்ற எழுத்தின் I என்ற கோடு குறிப்பது – பழங்கால மனிதன் முதுக்கு பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.

* நட்பு எழுத்துக்களை மரப்பிலக்கணம் எவ்வாறு கூறுகிறது – இன எழுத்துக்கள்

* என்பு என்பதன் பொருள் – எலும்பு

* “ங்” என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து – க

* “ஞ்” என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து – ச

ங்க – சிங்கம், ஞ்ச – மஞ்சள், ண்ட -பண்டம், ந்த – பந்தல், ம்ப – கம்பன், ன்ற – தென்றல்.

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us