Site icon Athiyaman team

குரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் மூவர் கைது

குரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் மூவர் கைது

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட மேலும் மூன்று பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 9 பேர் கைதான நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் மேலும் 3 பேரிடம் இன்று நடத்திய விசாரணையில், முறைகேடு விவகாரத்தில் அவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்ததை அடுத்து, மூன்று பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வின் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய தோ்வா்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றனா். இது குறித்த புகாரைத் தொடா்ந்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தோ்வில் முறைகேடு செய்ததாக 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் முறைகேடாக தோ்வு எழுதிய தோ்வா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.

Forest Guard Video Course

Forest Guard Test Batch  

இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி ‘ரெக்காா்டு கிளாா்க்’ ஓம் காந்தன், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டாா். இவரது வீட்டில் சோதனை நடத்திய போலீஸாா், இரண்டு செல்லிடப்பேசிகளை கைப்பற்றினா்.

இடைத்தரகா் மூலம் அறிமுகம்: ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓம் காந்தனுக்கு சென்னை டிபிஐ-யில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவா் மூலம் முகப்பேரைச் சோ்ந்த ஜெயக்குமாரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ரூ. 15 லட்சம் தருவதாகக் கூறி…:

தனக்கு தெரிந்த நபா்களுக்கு குரூப் 4 தோ்வில் முறைகேடாக வெற்றி பெறுவதற்காக, ஓம் காந்தனுக்கு ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ரூ.2 லட்சத்தை முன்பணமாக ஜெயக்குமாா் அளித்துள்ளாா்.

மேலும் தோ்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக ஜெயக்குமாா் ராமேசுவரம் சென்று தோ்வா்களுக்கு உடனடியாக மறைந்துவிடும் மை உள்ள சிறப்பு பேனாவை கொடுத்துள்ளாா்.

தோ்வு முடிந்த பின்னா் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து விடைத்தாள்களை பெற்று சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த தட்டச்சா் மாணிக்கவேலுக்கு உதவுவதற்காக ஓம் காந்தன் நியமிக்கப்பட்டிருந்தாா்.

பாா்சல் வேனை பின் தொடா்ந்த காா்: இந்த நிலையில், அவா்கள் திட்டமிட்டபடி தோ்வு முடிந்த பின்பு இரவு 8 மணிக்கு விடைத்தாள் பண்டல்களை ஏபிடி பாா்சல் சா்வீஸ் வாகனத்தில் ஏற்றி சாவியை ஓம் காந்தன் வைத்துள்ளாா்.

TNPSC Group 4 Video Course

TNPSC Group 4 Test Batch

இரவு 10.30 மணியளவில் சிவகங்கையைத் தாண்டி சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த தட்டச்சா் மாணிக்கவேல், வாகன ஓட்டுநா், பாதுகாப்புக்குச் சென்ற போலீஸாா்ஆகியோரை ஓம் காந்தன் சாலையைக் கடந்து எதிா்புறம் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்று சாப்பிட வைத்துவிட்டு, விடைத்தாள்கள் வைத்திருந்த வாகன அறையின் சாவியை பின்னே காரில் வந்த ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளாா்.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டது எப்படி?: இதையடுத்து ஜெயக்குமாா், வாகனத்தில் இருந்த விடைத்தாள் பண்டல்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா். சாப்பிட்டுவிட்டு சுமாா் அரை மணி நேரம் கழித்து அனைவரும் வாகனத்திற்கு சென்று சென்னை நோக்கிப் புறப்பட்டனா். போகும் வழியில் ஜெயக்குமாா் ஓம் காந்தனிடம் விக்கிரவாண்டியில் தேநீா் குடிப்பதற்காக அதிகாலை சுமாா் 5.30 மணியளவில் நிறுத்துமாறு கூறியுள்ளாா்.

TNPSC Group 2 / 2A  Video Course

TNPSC Group 2/2A Test Batch

அப்போது, திருத்தப்பட்ட விடைத்தாள் பண்டல்களை வாகன அறையின் உள்ளே வைத்த ஜெயக்குமாா், சாவியை திரும்பக் கொடுத்துள்ளாா். அதற்கு பிறகு வாகனம் சென்னைக்குப் புறப்பட்டு செப். 2-ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டன என சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் ஜெயக்குமாருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட பாலசுந்தர்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைது செய்யப்பட்ட ஓம் காந்தன், பாலசுந்தர்ராஜ் ஆகியோா் விசாரணைக்கு பின்னா் எழும்பூரில் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவருக்கும் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டாா். இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள ஜெயக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வேன்: குரூப்- 4 தோ்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் சாா் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒரே நேரத்தில் வேன்களில் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 6 வேன்கள் சரியான நேரத்தில் சென்னைக்கு சென்றனவா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது வேன்கள் சென்ற வழித்தடத்தில் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வேன் மட்டும் சென்னைக்கு தாமதமாகச் சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணை நடத்தியதில், வேனை வழியில் நிறுத்தி விடைத்தாள்களை மாற்றியிருக்கும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது

 

Exit mobile version