(பிப்ரவரி 22 : தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள்)
அண்ணல் போற்றிய வள்ளியம்மை
லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த, தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் சிறு வணிகம் நடத்திவந்த தம்பதியருக்கு மகளாகத் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறாத திருமணங்கள் செல்லாது எனத் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு அறிவித்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காந்திஜி தலைமையில் அங்கு வாழ்ந்துவந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், – அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்களில் பங்குபெற்று அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மையை 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல் நலக் குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் கோரிக்கை நிறைவேறாததால் வெளியேவர மறுத்தார்.
இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பு விடுதலையை ஏற்று வெளியே வந்தார். “
பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” என அண்ணல் காந்தியடிகளார் பாராட்டியுள்ளார்.
TNPSC GROUP 2 PREVIOUS YEAR QUESTION PDF
TNPSC Group 4 Last 6 Years Old Question Papers
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK