16 March
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப, தற்போது 29 மாவட்டங்களில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது. தர்மபுரி நகர கூட்டுறவு வங்கிக்கான எழுத்து தேர்வு, மே 23ம் தேதியும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மே 24ம் தேதியும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
