TNUSRB Police Constable Exam Pattern & Syllabus

TNUSRB இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு முறை (TNUSRB Police Constable Exam Pattern)

TNUSRB இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வு: முழுமையான வழிகாட்டி!

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வு, தமிழக இளைஞர்களின் கனவுப் பணியான காவலர் பணியில் சேர்வதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும். இந்தத் தேர்வுக்கு எப்படி தயாராவது, என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு விரிவான வழிகாட்டியை இங்கே காண்போம்.

டிஎன்யுஎஸ்ஆர்பி (TNUSRB) இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் என இரண்டு நிலைகளைக் கொண்டது. 📝

எழுத்துத் தேர்வு:

    • தமிழ் மொழித் தகுதித் தேர்வு (பகுதி-I): இதற்கான கால அளவு 80 நிமிடங்கள். இதில் 80 கேள்விகள் கேட்கப்படும்.
    • முதன்மை எழுத்துத் தேர்வு (பகுதி-II): இதற்கான கால அளவு 80 நிமிடங்கள். இதில் 70 கேள்விகள்
  • தேர்வு கொள்குறி வகை வினாக்களைக் கொண்டது (Objective type).
  • இத்தேர்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தேர்வுப் பகுதி பாடங்கள் வினாக்கள் மதிப்பெண்கள் நேரம்
பகுதி-I தமிழ் மொழித் தகுதித் தேர்வு 80 80 80 நிமிடங்கள் (1 மணி நேரம் 20 நிமிடங்கள்)
பகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு (பொது அறிவு & உளவியல்) 70 70 80 நிமிடங்கள் (1 மணி நேரம் 20 நிமிடங்கள்)

தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவை

 

  • தகுதித் தேர்வு (Qualifying Nature): பகுதி-I (தமிழ் மொழித் தகுதித் தேர்வு) ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் நீங்கள் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் உங்கள் இறுதித் தேர்ச்சிப் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
  • இறுதி மதிப்பெண்: உங்கள் இறுதித் தேர்ச்சிப் பட்டியல், பகுதி-II-ல் நீங்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அமையும்.
  • எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marks): இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது. எனவே, அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முயற்சி செய்யலாம்.
  • சரியான வினாக்கள்: முதன்மை எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, நீங்கள் அடுத்த கட்டத் தேர்வுகளுக்குத் தகுதி பெறுவீர்கள். ஆனால் இந்த போட்டித் தேர்வு என்பதால் கட் ஆப் அடிப்படையில் தான் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
  • இன்றைய ஆண்டு நடந்த தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடைய கட் ஆப் மதிப்பெண்.

காவலர் பணிக்கான TNUSRB தேர்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அதன் விகிதாச்சாரங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.

 

TNUSRB காவலர் தேர்வு நடைமுறை: நிலை வாரியான தேர்வு விகிதம்

காவலர் பணிக்கான தேர்வில் மொத்த காலிப் பணியிடங்கள்

3,644+21 ஆகும். இந்த பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்கள் படிப்படியாக பின்வரும் நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


1. எழுத்துத் தேர்வு (Written Examination)

  • பகுதி-I (தமிழ் மொழித் தகுதித் தேர்வு): இது ஒரு தகுதித் தேர்வு. இதில் 80 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதில் தேர்ச்சி பெறாதவர்களின் பகுதி-II விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
  • பகுதி-II (முதன்மை எழுத்துத் தேர்வு): இதில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் தான் இறுதித் தேர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

2. உடற்கூறு அளத்தல் (Physical Measurement Test – PMT)

  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப

    1:5 என்ற விகிதத்தில் (அதாவது, ஒரு பணிக்கு 5 பேர் வீதம்) உடற்கூறு அளத்தல் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

  • இது ஒரு தகுதிப் பிரிவு மட்டுமே. இதில் மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.

3. உடல் திறன் போட்டிகள் (Physical Efficiency Test – PET)

  • உடற்கூறு அளத்தல் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த நிலைக்கான போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.
  • இந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறனுக்கேற்ப

    24 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.


4. சிறப்பு மதிப்பெண்கள் (Special Marks)

  • உடல் திறன் போட்டிகளில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCC, NSS, அல்லது விளையாட்டு சான்றிதழ்கள் இருந்தால், அதற்கான

    6 மதிப்பெண்கள் சேர்க்கப்படும்.


5. சிறப்பு ஒதுக்கீடுகள் (Special Quotas)

  • மெச்சத்தக்க விளையாட்டு வீரர்கள் (Meritorious Sports Person): இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் 3% இந்த ஒதுக்கீட்டின்கீழ் நிரப்பப்படும். இந்தத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். போதிய தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில், அந்த காலிப் பணியிடங்கள் 7% விளையாட்டு ஒதுக்கீட்டோடு சேர்த்து நிரப்பப்படும்.
  • தமிழ் வழியில் பயின்றவர்கள் (PSTM): மொத்த காலிப் பணியிடங்களில் 20% பணியிடங்கள், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

பாடத்திட்டம் (Syllabus) 📚

எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தில் இருக்கும்.

பொது அறிவு (General Knowledge)

  • பொது அறிவியல்: இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து.
  • சமூக அறிவியல்: இந்திய வரலாறு, புவியியல், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம்.
  • பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய அரசியல், கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள், சுருக்கங்கள், புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் பற்றிய தகவல்கள்.

உளவியல் தேர்வு (Psychology Test)

  • தருக்க பகுப்பாய்வு (Logical Analysis): கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்யும் திறன்.
  • எண்ணியல் திறன் (Numerical Ability): கணித மற்றும் அளவுகோல் சார்ந்த கணக்குகளை தீர்க்கும் திறன்.
  • தகவல் கையாளும் திறன் (Information Handling Skills): தகவல்களைப் புரிந்துகொள்வது மற்றும் பகுப்பாய்வு செய்வது.
  • மனத்திறன் (Mental Ability): தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கும் திறன்.
  • தொடர்புத் திறன் (Communication Skills): தமிழில் தகவல்களைப் புரிந்துகொள்வது மற்றும் வெளிப்படுத்துவது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading