தமிழக அரசுப் பணியில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 3,235 காலியிடங்கள்.
இதற்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்களும், ஊழியர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்து வருகிறது.
ஓராண்டில் தமிழக அரசுப் பணியில் எந்தெந்த பதவிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன, அதற்கான தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும், நேர்முக்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்கள் எல்லாம் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி கடந்த 5 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.
இதன்மூலம், அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர்
Download the TNPSC Annual Calender 2018
TNPSC Annual Planner- 2018_ARP_FINAL