TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 24 JUNE 2023

CURRENT AFFAIRS –24 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ஜூன் 24 நடப்பு கால நிகழ்வுகள்

1.எந்தத் திட்டத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது?

A.மலர்கள்

B.இமைகள்

C.குழந்தைகள்

D.பெண்கள்

குறிப்பு:

  • இந்தத் திட்டத்தின்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முறையாக வழக்குப்பதிவு செய்து 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, பெண் குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
  • பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பிற துறையுடன் இணைந்து செயல்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
  • இத்திட்டத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

2.தமிழகத்திலிருந்து சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

A.உதயசங்கர்

B.சுஜாதா

C.சிவராமன்

D.ராம் தங்கம்

குறிப்பு:

  • நிகழாண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது நாகர்கோவிலை சேர்ந்த இளம் எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்திகை என்ற சிறுகதை தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறுகதை தொகுப்பு கடந்த 2019 இல் வெளியானது. இந்நூல் அசோகமித்திரன் விருது,சுஜாதா விருது, சௌமா இலக்கிய விருது, வடசென்னை தமிழ் சங்கம் விருது ஆகிய விருதுகளை  பெற்றுள்ளது.
  • இதன் தொடர்ச்சியாக யுவ புரஸ்கார் பெரிதும் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்வியலை திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
  • அதைத் தொடர்ந்து ராஜவனம், புலிக்குத்தி, கடவுளின் தேசத்தில் உள்ளிட்ட பல நூல்களை ராம் தங்கம் எழுதியுள்ளார்.

3.சாகித்திய அகாதெமியின் பால புரஸ்கார் விருது எந்த நூலுக்கு வழங்கப்பட உள்ளது?

A.ஆதனின் பொம்மை

B.ராஜ வனம்

C.புலிக்குத்தி

D.திருக்கார்த்தியல்

குறிப்பு:

  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் கா.உதயசங்கர். இவரது ஆதனின் பொம்மை என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமியின் நிகழ் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆதனின் பொம்மை என்ற நாவலின் கதைக்களம் கீழடி ஆகும். கீழடியை முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றை முறியடித்து தமிழர்களின் தொன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கீழடி அகழாய்வு வெளிப்படுத்திய வரலாற்றை இளம் தலைமுறையினரின் இடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் உருவானது ஆதனின் பொம்மை என்ற நாவல் என உதயசங்கர் தெரிவித்தார்.

4.இந்தியாவில் முதல் தயாரிப்பான செமி கண்டக்டர் சிப் ஆலை எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது?

A.சென்னை

B.பீஹார்

C.ஒரிசா

D.குஜராத்

குறிப்பு:

  • முதல் இந்திய தயாரிப்பான செமி கண்டக்டர் ஆலை 2024ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
  • அமெரிக்காவை சேர்ந்த கணினி சேமிப்பக சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் 22,540 கோடி முதலீட்டில் குஜராத் மாநிலத்தில் செமி கண்டக்டர் பாகங்கள் இணைப்பு மற்றும் பரிசோதனை ஆலையை அமைக்க உள்ளது.
  • செமி கண்டக்டர்களுக்கு சீனா, தைவான் ,வியட்நாம் ,கொரிய நாடுகளையே இந்தியா நம்பி இருந்த நிலையில் உள்நாட்டிலேயே செமி கண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

5.சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

A.ஜூன் 24

B.ஜூலை 24

C.ஆகஸ்ட் 24

D.ஜூன் 18

குறிப்பு:

  • கருப்பொருள்: தடைகளை உடைத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல், நிலையான வளர்ச்சிக்கான ராஜதந்திரத்தில் பெண்கள்.

6.கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் நீர் பாதுகாப்பில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது?

A.மத்திய பிரதேசம்

B.தமிழ்நாடு

C.பீகார்

D.ஆந்திரா

குறிப்பு:

  • ஜல்சக்தி அமைச்சகம் 2018 முதல் இந்த தேசிய நீர் பாதுகாப்புக்கான விருதுகளை அளித்து வருகிறது. அதில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த மாவட்டமாக ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் நாமக்கல் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
  • சிறந்த கிராம பஞ்சாயத்துக்கனா விருதை தெலுங்கானாவில் உள்ள ஜகன்னபுரம் என்ற கிராமம் முதல் இடத்திலும், கடவூர் கிராமம் (கரூர் ) இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.

7.ஏழாவது சர்வதேச காலனி கண்காட்சி எங்கு நடக்க உள்ளது?

A.மும்பை

B.புது டெல்லி

C.கொல்கத்தா

D.சென்னை

குறிப்பு:

  • இந்தியாவில் காலனி தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் புதுடெல்லி பிரகதி மைதானத்தில் வரும் 27ஆம் தேதி ஏழாவது இந்திய சர்வதேச காலனி கண்காட்சியை இந்திய காலனி தொழிற்சாலைகள் கூட்டமைப்பு நடத்த உள்ளது.

8.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்ட 16 அடி உயர கருணாநிதியின் சிலை எந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது?

A.இத்தாலி

B.பிரான்ஸ்

C.அமெரிக்கா

D.தென்னாபிரிக்கா

குறிப்பு:

  • திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் 7000 சதுர அடி பரப்பில் 12 கோடியில் கலைஞர் கோட்டம் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது .
  • இங்கு இத்தாலி பளிங்கு கற்களால் 16 அடி உயர கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் நவீன தொழில்நுட்பத்தில் கருணாநிதியுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

9.ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி என்று ஏற்றப்படுகிறது?

A.ஏப்ரல் 14 2024

B.ஏப்ரல் 16 2024

C.ஏப்ரல் 16 2025

D.ஏப்ரல் 14 2025

குறிப்பு:

  • 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் திருவிழா நடைபெற உள்ளது.
  • பிரான்ஸ் நாட்டின் பிரதான இடங்கள் உட்பட 400 நகரங்களுக்கு மொத்தம் 68 நாட்கள் ஒலிம்பிக் ஜோதி பயணம் ஆகிறது.

9.ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி எது?

A.ரயில் மதத்

B.மேரி சஹேலி

C.ரயில் சேப்

D.A மற்றும் B

குறிப்பு:

  • ரயிலில் பெண்கள் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்தால் ரயில் மதத் செயலி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
  • ரயில் மதத் மற்றும் மேரி சஹேலி போன்ற செயலிகளின் மூலமாக பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.
  • இந்த செயலின் கீழ் 6000 மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
  • இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே பெண் அதிகாரிகள், காவலர்கள் அடங்கிய 17 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு RPF மூலமாக உதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 24 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading