15 நாட்களில் சிறப்பாசிரியர்தேர்வு முடிவுகள்
உடற்கல்வி, தையல், இசை மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உள்ள ஆயிரத்து 325 காலிப்பணியிடங்களுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.
இன்னும் 15 நாட்களில் தேர்வு முடிவுகள் ஓ.எம்.ஆர் சீட்டுடன் வெளியிடப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் பணி ஆணை வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
