பொது தமிழ் வினா விடைகள் | சான்றோர்களின் சிறப்புப் பெயர் பட்டியல்
- தெய்வப்புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நான்முகனார், நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, பெருநாவலர் – திருவள்ளுவர்
- தம்பிரான் தோழர், வன்தொண்டன் – சுந்தரர்
- தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல்வி – ஒளவையார்
- புலனழுக்கற்ற அந்தணன், விவிரித்த கேள்வி விளங்கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி – கபிலர்
- மாத முனிவன், மாமுன், தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் – அகத்தியர்
- வரலாற்றுப் புலவர் – பரணர்
- இலக்கியச் சிங்கம் – நக்கீரன்
- அரசத் துறவி – இளங்கோவடிகள்
- அம்மை – காரைக்காலம்மையார்
- காப்பியனார் – தொல்காப்பியனார்
ORDER TNPSC TAMIL BOOKS
WHATSAPP- 8681859181
JOIN TELEGRAM GROUP
- சாத்தன் – சீத்தலைச் சாத்தனார்
- இன்தமிழ் ஏசுநாதர், சம்மந்தர் – திருஞானசம்பந்தர்
- கவிமணி – தேசிய விநாயகம் பிள்ளை
- அப்பர் – திருநாவுக்கரசர்
- தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார், வாதவூரடிகள், ஆளுடைய பிள்ளை – மாணிக்கவாசகர்
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி, உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி, மகாகவி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலை – பாரதியார்
- கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி – கம்பர் (கம்பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல்)
- சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் – ஆண்டாள்
- தமிழ்வியாசர் – நம்பியாண்டார் நம்பி
- அருண்மொழித் தேவர் – சேக்கிழார்
- பட்டர்பிரான் – பெரியாழ்வார்
- வெண்பாப்புலவர் – புகழேந்தி
- தமிழ்த் தென்றல் – திரு.வி.கல்யாண சுந்தரனார்
- உவமைக்கவிஞர் – சுரதா
- புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங்காட்டுத் தம்பி, கனகசுப்புரத்தினம், தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் – பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கம் பிள்ளை
- பரணிப்புலவர் – ஜெயங்கொண்டார்
- ஆசுகவி – காளமேகப்புலவர்
- சந்தக்கவி – அருணகிரிநாதர்
- சன்மார்க்க கவி, வள்ளலார் – இராமலிங்க அடிகளார்
- திருமங்கை மன்னன் – திமங்கையாழ்வார்
- கவியரசு – கண்ணதாசன்
- மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- சிறுகதை மன்னன்- ஜெயகாநாதன், புதுமைப்பித்தன்
- சுஜாதா – இரங்கராஜன்
- தமிழ் அண்ணல் – டாக்டர் இராமபெரியகருப்பன்
- கிறிஸ்துவக் கம்பன் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவர் இரட்சண்ய யாத்திரிகம் எனும் நூலின் ஆசிரியர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்)
- பதிப்புச் செம்மல் – ஆறுமுக நாவலர்
- சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை
- மொழி ஞாயிறு – தெய்வநேயப் பாவாணர்
- தத்துவக் கவிஞர் – திருமூலர்
- கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை – காமராசர்
- அண்ணல், மகாத்மா, தேசப்பிதா – காந்தியடிகள்
- தமிழர் தந்தை – சி.பா. ஆதித்தனார்
- தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – கல்கி
- தனித்தமிழ் இசைக்காவலர் – இராஜா அண்ணாமலைச் செட்டியார்
- சந்தக்கவி – அருணகிரிநாதர்
48 – ரசிகமணி – டி.கே.சி
- தனித்தமிழ் இயக்கத் தந்தை – மறைமலையடிகள்
- தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின் ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்
- இராஜாஜி, மூதறிஞர் – இராஜகோபாலாச்சாரி
- கவிக்குயில் – சரோஜினி நாயுடு
- சிற்பி – பாலசுப்பிரமணியன்
- உவமைக்கவிஞர், சுரதா – சுப்புரத்தினதாசன். இயர்பெயர் இராசகோபாலன், பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக்கொணாடார்.
- தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டின் தாகூர், ரமி, கவிஞரேறு, பாவலர் மணி – வாணிதாசன்
- கவியரசு – வைரமுத்து
- நடமாடும் பல்கலைக்கழகம் – நெடுஞ்செழியன்
- திராவிட சாஸ்திரி – சூரிய நாராயண சாஸ்திரிகள்
- அழகிய மணவாளதாசர், திவ்வியகவி – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- கவிராட்சசன் – ஓட்டக்கூத்தர்
- உரையாசிரியர் – இளம்பூரணர்
- பெருங்கவிக்கோ – பா.மு. சேதுராமன்
- மீரா – மீ. ராஜேந்திரன்
- தமிழ்மாணவர் – போப்பையர்
- வீரமாமுனிவர் – கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
- அறிஞர், பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
- புரட்சித் தலைவர் – எம்.ஜி.ராமச்சந்திரன்
- கலைஞர் – மு.கருணாநிதி
- வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடர், தெற்காசிய சாக்ரடீஸ், வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர் – ஈ.வெ.இராமசாமி
- இந்தியாவின் நைட்டிங்கேல் – சரோஜினி நாயுடு
- இந்தியாவின் எடிசன் – ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு)
- இந்தியாவின் முதிரிந்த மனிதர் – தாதாபாய் நவ்ரோஜி
- இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் – வல்லபாய் படேல்
- இந்தியாவின் விடிவெள்ளி – ராஜா ராம் மோகன் ராய்
- ஆசிய ஜோதி, இந்தியாவின் ஆபரணம் – நேரு
- இந்தியாவின் கிளி – அமிர்குஸ்ரு
- இந்தியாவின் தேச பந்து – சி.ஆர்.தாஸ்
- இந்தியாவின் பங்க பந்து – முஜிபூர் ரஹமான்
- இந்திய வானசாஸ்த்திரத்தின் தந்தை – ஆரியப்பட்டர்
- பஞ்சாப் சிங்கம் – வாலா லஜபதிராய்
- மராத்திய சிங்கம் – சிவாஜி
- லோகமான்யர் – பாலகங்காதர திலகர்
- பீமாராவ் ராம்ஜி – அம்பேத்கர்
- இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் – தயானந்த சரஸ்வதி
- தமிழ்நாட்டின் மாப்பசான் – ஜெயகாந்தன்
- பாவலர் ஏறு – பெருஞ்சித்தரனார்
- இந்தியாவின் ஷேக்ஸ்பியர் – காளிதாசர்
- தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
- தென்னாட்டின் ஜான்சிராணி – கடலூர் அஞ்சலையம்மாள்
- கவிக்கோ – அப்துல் ரஹமான்
- தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசன்
- தற்கால உரைநடையின் தந்தை – ஆறுமுக நாவலர்
- தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலை அடிகள்
- தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
- தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹாட்லி – சுஜதா . இவரது இயர்பெயர் எஸ்.ரங்கராஜன்.
- தமிழகத்தின் அன்னிபெசண்ட் – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவ்வாறு அழைத்தவர் காந்தியடிகள்.
- தென்னாட்டு போஸ் – முத்துராமலிங்க தேவர்
- தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன், வ.உ.சி – வ.உ.சிதம்பரனார்.
- பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாரயணகவி
- சிலம்புச் செல்வர் – மா.பெ.சிவஞானம்
- அரசியலின் சொல்லின் செல்வர் -ஈ.வே.கி.சம்பத்
- இலக்கியத்தின் சொல்லின் செல்வர் – இரா.பி.சேதுப்பிள்ளை
- சொல்லின் செல்வன் – அனுமன்
- முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ. விஸ்வநாதம்
- தமிழ் தென்றல் – திரு.வி.கல்யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்)
- குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளியப்பா
- இயற்கைக் கவிஞர் – வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
- மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
- கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
- நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர், ஆஸ்தான கவிஞர், ஆட்சி மொழிக்காவலர், முதல் அரசவைக் கவிஞர் – வெ.ராமலிங்கம்பிள்ளை
- திருவருட்பிரகாச வள்ளலார் – இராமலிங்க அடிகளார்
- திவ்ய கவி, தெய்வகவி, அழகிய மாணவாளதாசர் – பிள்ளைபெருமாள் ஐயங்கார்
- கவியரசு – முடியரசன் – இயற்பெயர் துரைராசு
- நாடகத்தந்தை – பம்மல் சம்மந்த முதலியார்
- தமிழ்நாடக தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை – சங்கரதாஸ் சாமிகள்
- தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை – கந்தசாமி
- சிறுகதை மன்னன், புதுமைப் பித்தன் – சொ.விருத்தாசலம்
- சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.ஐயர்
- புதுக்கவிதையின் பிதாமகன் – நா.பிச்சமூர்த்தி
- இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
- திரை இசைத் திலகம் – மருதகாசி
- ஏழிசை மன்னர் – தியாகராஜ பாகவதர்
- முத்தையா – கண்ணதாசன் (சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்ய அகடாமி பரிசு பெற்றவர்)
- கவிராட்சன் – ஒட்டக்கூத்தர்
- ரசிகமணி – டி.கே.சிதம்பரநாத முதலியார்
- பண்டித மணி – மு.கதிரேச செட்டியார்
- நவீனக் கம்பர் – மீனாட்சி சுந்தரனார்
- அமுது அடியடந்த அன்பர், திருவாதவூரர், ஆளுடை அடிகள் – மாணிக்கவாசகர் (சைவ சமயக்குரவரர் நால்வரில் ஒருவர்)
- திராவிட சிசு, ஆளுடைப்பிள்ளை – திருஞானசம்பந்தர்
- அப்பர், வாசீகர், தருமசேனர், மருள்நீக்கியார், ஆளுடை அரசு – திருநாவுக்கரசர்
- பொதிகை முனி – அகத்தியர்
- நாவலர் – சோமசுந்தர பாரதியார்
- கவியோகி – சுத்தானந்த பாரதியார்
- பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடகப் பேராசிரியர் – சூரிய நாராயண சாஸ்திரி
- தமிழ் மாணவர் – ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்)
- கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி – வீரமாமுனிவர். (இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிரமணியன்)
- திராவிட ஒப்பிலக்கணத் தந்தை – கார்டுவெல்
- இரட்டைப் புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்
- இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்
- மைசூர் புலி – திப்புசுல்தான்
- மாதர்குல மாணிக்கம் – முத்துலட்சுமி ரெட்டி (அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்)
- வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்
- சுல்தான் அப்துல் காதர் – குணங்குடி மஸ்தான்
- மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்
- காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் – அம்புஜத்தமாள்