சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை
இந்தியாவின் “சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் விட்டல் மகாதியோ தர்குண்டே. அச்சு சக்திகளுக்கு எதிரானப் போரில் பங்கேற்பதை ஆதரித்தவர். மனித நேயத்திற்கான புதிய தத்துவத்தை வகுத்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்
விட்டல் மகாதியோ தர்குண்டே (3-ஜூலை -1909 – 22-மார்ச்-2004)
வழக்கறிஞர், சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் தலைவர். இந்தியாவின் “சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். தீவிர ஜனநாயகக் கட்சியின் முழு நேர உறுப்பினராக இருந்த இவர் அக்கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• அச்சு சக்திகளுக்கு எதிரானப் போரில் பங்கேற்பதை ஆதரித்த அவர், அதே நேரத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்.
• மனித நேயத்திற்கான புதிய தத்துவத்தை வகுத்தவர்.
• சுதந்திரத்திற்குப் பிறகு பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
• 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி மறைந்தார்.