Tamil Nadu 6th Standard New திருக்குறள் Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 திருக்குறள் Book Back Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————–
- கமின்மை
- அறிவுடைய மக்கட்பேறு
- வன்சொல்
- சிறிய செயல்
விடை : அறிவுடைய மக்கட்பேறு
2. ஒருவர்க்குச் சிறந்த அணி ——————
- மாலை
- காதணி
- இன்சொல்
- வன்சொல்
விடை : இன்சொல்
II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
III. நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் – இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
எதுகைச் சொற்கள் | மோனைச் சொற்கள் |
செயற்கரிய – செய்வார் | செயற்கரிய – செய்வார் |
செயற்கரிய – செய்கலா | செயற்கரிய – செய்கலா |
IV. பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர் . “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்ற
விடை:-
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
V. குறுவினாக்கள்
1. உயிருள்ள உடல் எது?
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைகிறது
3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
“இயற்கையின் கொடைகள்”
II. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______________ என்று பெயர். (பறவை / பரவை)
விடை : பரவை
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ________________ ஆற்றினார். (உரை / உறை)
விடை : உரை
3. முத்து தம் _______________ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
விடை : பணி
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை __________________ (அலைத்தாள் /அழைத்தாள்).
விடை : அழைத்தாள்
III. திரட்டுக.
“கடல்” என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
நேமி, வேலம்,ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, வேலம், ஆர்கலி, உததி, அத்தி, திரை, நரலை, சமுத்திரம்
IV. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.
3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
V. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. “புள்” என்பதன் வேறு பெயர்
ப | ற | வை |
2. “பறவைகள் இடம்பெயர்தல்”
வ | ல | சை | போ | த | ல் |
3. “சரணாலயம்” என்பதன் வேறு பெயர்
பு | க | லி | ட | ம் |
VI. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
விடை: சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ______________
விடை: மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ______________
விடை : முப்பது
3. திங்கள் என்பதன் பொருள் ______________
விடை: நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை ______________
விடை: செங்கல் நாரை
5. பாரதியார் ______________ வேண்டும் என்று பாடுகிறார்.
விடை: காணி நிலம்
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் ______________
விடை: தனிநிலை
VIII. கவிதை படைக்க.
கீழே காணப்படும் “மழை” பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
என்றும் இளமை சிந்திடும்
எல்லா மணமும் நிறைந்திடும்
எங்கும் வளமை பொழிந்திடும்
IX. கலைச்சொல் அறிவோம்
- கண்டம் - Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
Tamil Nadu 6th -12 TAMIL Book Back Answers
Download TNPSC App