சிங்காரவேலர்

‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர்-தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படும் மே 1ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு இன்னும் கூடுதல் சிறப்பைத் தரக்கூடியது. 1923 மே 1ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முறையாகத் தொழிலாளர் தினத்தைச் சென்னையில் கொண்டாடியவர் ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர். 1918 இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கிய சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சிங்காரவேலரை இன்று நினைவில் கொள்வது அவசியம்.

“சிந்தனைச் சிற்பி” சிங்காரவேலர்

சிங்காரவேலர்  ம. சிங்காரவேலர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனும் பல பரிமாணங்களைக் கொண்டவர். மயிலாப்பூர் சிங்காரவேலு எனும் வழங்குபெயரானது தமது பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப இவர் ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி” சிங்காரவேலர் எனும் சிறப்புப் பெயராக மாறியது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop