தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் மே.7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Civil Judge
காலியிடங்கள்: 320
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் வேண்டும். அறிவிப்பு வெளியான நாளில் எந்த நீதிமன்றத்திலாவது வழக்கறிஞராகவோ அல்லது பிளீடராகவோ பயிற்சி பெற வேண்டும். விரிவான தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.27,700- 770-33,090 – 920 – 40450- 1080- 44770.
கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.500ம், பதிவுக் கட்டணமா ரூ.150ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம். ஏற்கனவே, டிஎன்எஸ்சியில் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
Official Notifications : Download
APPLY Here- http://www.tnpscexams.in/