Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(2 Sep 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 2 Sep 2019
முக்கியமான நாட்கள்
உலக தேங்காய் தினம்(world coconut day)
- உற்பத்தி மற்றும் தயாரிப்பு பல்வகைப்படுத்தலில் கவனம் செலுத்தி தேங்காய் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக உலக தேங்காய் தினம் (WCD) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் (ஏபிசிசி) உருவான தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
- இந்த நாள் தேங்காயின் சுகாதாரம் சார்ந்த நன்மைகள் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் தேங்காய் மேம்பாட்டு வாரியமானது செப்டம்பர் 2 ஆம் தேதி ஒடிசாவில் ‘குடும்ப நலனுக்கான தேங்காய்’ என்ற கருப்பொருளின் கீழ் 21வது உலக தேங்காய் தினத்தைக் கொண்டாட இருக்கின்றது.
- 2019 ஆம் ஆண்டின் தீம் “குடும்ப நலனுக்கான தேங்காய்”.
நியமனம்
தெலுங்கானா மாநில ஆளுநர்
- தெலங்கானா, ஆந்திரம் ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டார்.அவருக்குப்பின் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செப்.1-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
- 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வந்தார். தமிழக பாஜக தலைவர் பதவி நடப்பாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 மாநில ஆளுநர்கள் நியமனம்
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா, கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்ட்ரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார்.
- தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன், கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, ராஜஸ்தான் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா, மஹாராஷ்டிரம் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய செய்திகள்
முதலாவது தேசிய வானொலி நிலையம்
- சீனாவின் குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்கான வானொலி ஒலிபரப்பு சேவை , செப்டம்பர் மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது.
- ரேடியோ தி கிரேட்டர் பே என்று அழைக்கப்படும் இந்த வானொலி ஒலிபரப்பு சேவை, சீன ஊடகக்குழுமத்தின் கீழே இயங்கி வருகிறது. குவாங்டொங், ஹாங்காங் மற்றும் மக்கௌபெரும் விரிகுடா பிராந்தியத்துக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள முதலாவது தேசிய வானொலி நிலையம் ஆகும்.
- தினமும் 21 மணிநேரம், எஃப்.எம் 101.2 மெகா ஹெட்ஸ் மற்றும் மத்திய அலைவரிசை 1215 கிலோஹர்ட்ஸ் மூலமாக, குவாங்டொங் மாநிலத்தின் 9 நகரங்களுக்கும் ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களுக்கும் இந்த வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
100 நகரங்களில் மத்திய அரசின் சுகாதார திட்டம்
- CGHS திட்டத்தின் கீழுள்ள நகரங்களில் வாழும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்க்கும் அவரைச் சார்ந்து இருப்போருக்கும் மத்திய அரசு சுகாதாரத் திட்டம் விரிவான சுகாதாரப் பராமரிப்பை வழங்குகிறது. இது 1954-ஆம் ஆண்டு புதுதில்லியில் தொடங்கப்பட்டது.
- 2014 வரை இத்திட்டம் 25 நகரங்களில் மட்டும் செயலுக்கு வந்தது.அவைகள் அலகாபாத், அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், போப்பால், சண்டிகார், சென்னை, தில்லி, தெகராதூன், கவுகத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மீரட், மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ராஞ்சி, ஷில்லாங், திருவனந்தபுரம், மற்றும் ஜம்மு ஆகும்.
- மத்திய அரசின் மருத்துவ சுகாதாரத் திட்டம் இன்னும் மூன்றாண்டுகளில்(2022 க்குள் ) 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதை
- ஆந்திரப் பிரதேச மாநிலம், செர்லோபள்ளி-ராபூரு இடையிலான ரயில் வழித்தடத்தில் மிக நீளமான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முழுவதும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
- 6.7 கி.மீ. நீளமுள்ள இதுவே நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதையாகும். ரூ.437 கோடி செலவில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது.
- இந்த சுரங்க மின்வழித் தட ரயில் பாதையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.
விளையாட்டு செய்திகள்
மினி மராத்தான் போட்டி
- காஞ்சிபுரத்தில் சி.ஐ.டி.யூ. அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் ராமச்சந்திரனும், பெண்கள் பிரிவில் கேளம்பாக்கம் திலகவதியும் முதல் பரிசு பெற்றனர்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியுள்ள யஸ்ஹஸ்வினி தங்கம் வென்றார்.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Sep -2 ]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.