சில முக்கிய நடப்பு நிகழ்வுகள்

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF 
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

சில முக்கிய நடப்பு நிகழ்வுகள்

செப்.19: திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டி.இ.எஸ். ராகவன், தாகூரின் கோரா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன் ஆகியோர் 2020-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

செப்.20: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். முன்னதாக உட்கட்சிப் பிரச்சினை காரணமாக கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

செப்.21: ஜப்பானைச் சேர்ந்த 107 வயதான இரட்டைச் சகோதரிகள் உமேமோ சுமிம்மா, கவுமே கோடமா ஆகியோர் உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

செப்.21:கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. ஜஸ்டின் ட்ரூடோ 2015 முதல் அந்நாட்டுப் பிரதமராக இருந்துவருகிறார்.

செப்.22: சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் மகாத்மா காந்தி கோட், அணிவதைத் துறந்து, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

செப்.22: தமிழகத்தில் காலியாக இருந்த இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்வா யினர். புதுச்சேரியில் முதன் முறையாக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி மாநிலங்களவை எம்.பி.யானார்.

செப்.23: தமிழகத்தின் கோவளம், புதுச்சேரியின் ஏடென் ஆகிய கடற்கரைகள் உலகப் புகழ்பெற்ற நீலக்கொடிச் சான்றிதழைப் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் இச்சான்றிதழைப் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.

செப்.23: தோகாவில் நடைபெற்ற ஸ்னூக்கர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். இது அவர் வெல்லும் 24-ஆவது பட்டமாகும்.

செப்.24: பெருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்.25: இந்திய விமானப் படையின் தளபதி பதவுரியா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: