TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 24 MAY 2023

CURRENT AFFAIRS –24 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS                 

CURRENT AFFAIRS MAY 24

1.போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ் -01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எப் -12 ராக்கெட் எந்த தேதி அன்று விண்ணில் பாய்கிறது?

A.மே 29

B.மே 30

C.மே 28

D.மே 29

குறிப்பு-

  • போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எப் -12 ராக்கெட் மே 29ம் தேதி அன்று விண்ணில் பாய்கிறது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.
  • நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்- 3 விண்கலத்தை ஜூலை மாதத்தில் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

2.தரைவழி ,கடல் வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை உருவாக்க எந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது?

A.ISRO

B.DRDO

C.தேசிய புவியியல் நிறுவனம்

D.ஸ்டார்ட் அப் நிறுவனம்

குறிப்பு-

  • தரைவழி ,கடல் வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
  • அதன்படி ரூபாய் 1420 கோடி செலவில் ஐ. ஆர். என். எஸ். எஸ்சின் 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

3.சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சீடரான சகோதரி நிவேதிதாவின் ஆளுயர சிலை எந்த நகரில் திறக்கப்பட உள்ளது?

A.விம்பிள்டன்

B.நீயூயார்க்

C.பாரிஸ்

D.சிகாகோ

குறிப்பு-

  • சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சீடரான சகோதரி நிவேதிதாவின் ஆளுயர சிலை லண்டன் விம்பிள்டன் நகரில் திறக்கப்பட உள்ளது.
  • மேற்கு வங்காளம் சர்க்காச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் செயலாளர் சுவாமி விஸ்வமயானந்தஜி வடிவமைத்து பிரபல சிற்பியின் நிரஞ்சன் செதுக்கிய சகோதரி நிவேதிதாவின் 6.2 அடி உயர சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது.
  • அயர்லாந்தில் 1867 ஆம் ஆண்டு பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த சகோதரி நிவேதிதாவின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள் ஆகும்.

4.கங்கைகொண்ட சோழபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

A.அரியலூர்

B.பெரம்பலூர்

C.திருச்சி

D.மதுரை

குறிப்பு-

  • அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைபுரம் கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு  செங்கற்களால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மேற்காக 315 சென்டிமீட்டர் நீளமும், 45 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

5.தமிழகத்தில் நடைபெறும் எரியா சபை கூட்டங்ளில் தவறானது எது?

A.தேசிய வாக்காளர் தினம்

B.உலக நீர் தினம்

C.அம்பேத்கர் பிறந்த தினம்

D.சர்வதேச மனித உரிமை தினம்

குறிப்பு-

  • நகர்ப்புற உள்ளாட்சிகளில் எரியா சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இது கிராம சபை கூட்டம் போல் செயல்படும்.
  • தேசிய வாக்காளர் தினம் -ஜனவரி 25, அம்பேத்கர் பிறந்த தினம் -ஏப்ரல் 14, அண்ணா பிறந்த தினம் செப்டம்பர் -15 ,
  • சர்வதேச மனித உரிமை தினம் டிசம்பர்- 10 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

6.பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட குட்டி இந்தியா நட்புறவு நினைவுச் சின்னம் எந்த நகரில் அமைந்துள்ளது?

A.பப்புவா நியூகினியா

B.சிட்னி

C.மெல்போர்ன்

D.லண்டன்

குறிப்பு-

  • பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட குட்டி இந்தியா நட்புறவு நினைவுச் சின்னம்
  • சிட்னி நகரில் ஹாரிஸ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் துணை தூதரகம் பிரிஸ்பேன் நகரில் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

7..திரிபுரா மாநில சுற்றுலாத் துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?

A.சச்சின் டெண்டுல்கர்

B.சௌரவ் கங்குலி

C.சேவாக்

D.ரெய்னா

குறிப்பு-

  • திரிபுரா மாநில சுற்றுலா துறை தூதராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி ஆவார்.
  • இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.

8..ஷாட் கன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 எந்த நாட்டில் நடைபெறுகிறது ?

A.கஜகஸ்தான்

B.நியூசிலாந்து

C.போலாந்து

D.நார்வே

குறிப்பு-

  • ஷாட் கன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 கஜகஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.
  • மகளிர் தனி நபர் ஸ்கீட் பிரிவில் சுனிமத் செகோன் வெள்ளி பதக்கத்தையும், தர்ஷனா ரத்தோர் வெண்கலம் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

9.13-வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

A.இந்தியா

B.ஜிம்பாவே

C.நெதர்லாந்து

D.தாய்லாந்து

குறிப்பு-

  • 13வது ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18 இல் தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

                                                                      

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 24 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: