CURRENT AFFAIRS –27 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY -27
1.குடியரசுத் தலைவரால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
A.ராஜா
B.வைத்தியநாதன்
C.முனிஸ்வர் நாத் பண்டாரி
D.கங்கா பூர்வலா
குறிப்பு-
- குடியரசுத் தலைவரால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா.
- இவர் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
- 1962 மகராஷ்டிராவில் பிறந்து 1985ல் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்.
2.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள சிறப்பு நாணயம் ஒன்றினை பாரத பிரதமர் வெளியிடுகிறார்?
A.ரூ.50
B.ரூ. 75
C ரூ.100
D.ரூ.150
குறிப்பு.
- புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் ரூபாய் 75 மதிப்புள்ள சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார் .
- இது 35 கிராம் எடை,நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணில் உள்ள சிங்க தலைகள் மற்றும் கீழ்பகுதியில் பாரத் மற்றும் இந்தியா என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.
- மற்றொரு பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் கீழ் சன்சத் சன்குல் 2023 என பொறிக்கப்பட்டுள்ளது.
3.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் யார்?
A.டி. ஆர்.பி. ராஜா
B.ஜெயரஞ்சன்
C.உதயநிதி
D.எழில் நாகநாதன்
குறிப்பு-
- தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆவார்.
- இதன் தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவார்.
- பகுதி நேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ திரு.எழில் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4.சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் யார்?
A.காளியம்மாள்
B.முத்தமிழ் செல்வி
C.நந்தினி தேவி
D.அம்பிகா
குறிப்பு-
- சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில் பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தமிழ் செல்வி ஆவார்.
5.சிவிங்கி புலித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் சீட்டா வாழ்விடங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிப்பது குறித்தும் மத்திய அரசு யார் தலைமையில் குழு அமைத்தது?
A.கோபாலகிருஷ்ணன்
B.ராஜேஷ் கோபால்
C.மதன் நாயர்
D.ராம் பூர்வா
குறிப்பு-
- சிவிங்கி புலித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் சீட்டா வாழ்விடங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை வழங்க மத்திய அரசானது ராஜேஷ் கோபால் தலைமையில் குழு அமைத்தது.
- இவர் உலகப் புலிகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் ஆவார்.
6.தமிழகத்தில் உயிர்காப்பு காற்று இயக்க கருவி உற்பத்தி செய்யும் ஆலை எந்த இடத்தில் அமைந்துள்ளது?
A.ஒரகடம்
B.ஸ்ரீபெரும்புதூர்
C.திருப்போரூர்
D.மாமண்டூர்
குறிப்பு-
- ஜப்பான் சென்றுள்ள தமிழக முதல்வர் அங்குள்ள நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
- தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம் நிறுவனம் இடையே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள காற்றுப்பை இயக்க கருவி ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
7.குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்பட்ட மத்திய குடிமைப் பணி ஆணையத்தின் தலைவர் யார்?
A.மனோஜ் சோனி
B.ராஜேஷ் கண்ணன்
C.கிஷோர் குமார்
D.ஜெகதீஷ் பேடி
குறிப்பு-
- குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்பட்ட மத்திய குடிமைப் பணி ஆணையத்தின் தலைவர் மனோஜ் சோனி ஆவார்.
8.ஐநாவின் புலம் பெயர்வு முகமையின் முதல் பெண் தலைவர் யார்?
A.எமி. E.போப்
B.ஆலிஸ் ஜாக்சன்
C.கீதா ஜேம்ஸ்
D.ஜெ. ஜெனி புரூஸ்
குறிப்பு-
- ஐநாவின் புலம் பெயர்வு முகமையின் முதல் பெண் தலைவராக எமி. E.போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- International organisations of migration 1951-ல் தொடங்கப்பட்டது.
9.கிராமப்புற சமூகத்தினருக்கு கல்வியை வழங்க உத்தரபிரதேச அரசானது ஏற்படுத்திய இயங்கலை கிராமப்புற முன்னெடுப்பின் பெயர்?
A.பஹல்
B.ஹாப்பி
C.கல்வி வாலா
D.மைட்டு ரிலாக்ஸ்
குறிப்பு-
- உத்தரப்பிரதேச ஆனது இயங்கலை கிராமப்புற கல்வி முன்னெடுப்பு என்னும் பஹல் முன்னெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- உத்தரப்பிரதேச மாநில இடைநிலை கல்வித்துறை மற்றும் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
- கிராமப்புற சமூகத்தினருக்கு கல்வியை வழங்க வழிவகை செய்கிறது.
10.யுஏஇ (UAE)யில் நடைப்பெற்ற ஜார்ஜ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் -2023 யில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்ற இந்திய வீரர் யார்?
A.குகேஷ்
B.பிரமானந்தா
C.உபதுல்லா
D.அர்ஜுன் எரிகாய்சி
குறிப்பு-
- யுஏஇ நடைப்பெற்ற ஜார்ஜ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் -2023 யில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்ற இந்திய வீரர் அர்ஜுன் எரிகாய்சி ஆவார்.
- மற்றொரு இந்திய வீரரான குகேஷ் மூன்றாம் இடம் பெற்றார்
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 27 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.