Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 இன்பத்தமிழ் Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்.
இன்பத்தமிழ்
I. சொல்லும் பொருளும்
- நிருமித்த – உருவாக்கிய
- விளைவு – விளைச்சல்
- சமூகம் – மக்கள் குழு
- அசதி – சோர்வு
- சுடர் – ஒளி
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்
- சமூகம்
- நாடு
- வீடு
- தெரு
விடை : சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்
- மகிழ்ச்சி
- கோபம்
- வருத்தம்
- அசதி
விடை : அசதி
3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________
- நிலயென்று
- நிலவென்று
- நிலவன்று
- நிலவுஎன்று
விடை : நிலவென்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________
- தமிழங்கள்
- தமிழெங்கள்
- தமிழுங்கள்
- தமிழ்எங்கள்
விடை : தமிழெங்கள்
5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
- அமுது + தென்று
- அமுது + என்று
- அமது + ஒன்று
- அமு + தென்று
விடை : அமுது + என்று
6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
- செம்மை + பயிர்
- செம் + பயிர்
- செமை + பயிர்
- செம்பு + பயிர்
விடை : செம்மை + பயிர்
III. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
1. விளைவுக்கு | பால் |
2. அறிவுக்கு | வேல் |
3. இளமைக்கு | நீர் |
4. புலவர்க்கு | தோள் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ. |
V. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக
- பேர் – நேர்
- பால் – வேல்
- ஊர் – நீர்
- வான் – தேன்
- தாேள் – வாள்
கூடுதல் வினாக்கள்
A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. _______________ அமுதென்று பேர்
- தமிழிற்கு
- தமிழுக்கு
- தமிழுக்கும்
- தமிழுக்கே
விடை : தமிழுக்கும்
2. தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது
- தேன்
- நெய்
- நெல்
- பால்
விடை : பால்
3. தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது
- அம்பு
- கேடயம்
- வாள்
- வேல்
விடை : வேல்
4. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது
- சாேறு
- தேன்
- நீர்
- பால்
விடை : தேன்
5. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.
- அணிகலம்
- கவசம்
- வாள்
- வேல்
விடை : வாள்
6. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- இராமலிங்க அடிகளார்
- திருவள்ளுவர்
விடை : பாரதிதாசன்
7. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுபவர்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- அழ.வள்ளியப்பா
- கவிமணி
விடை : பாரதிதாசன்
8. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்
- தேசிய விநாயகம் பிள்ளை
- சுரதா
- வள்ளலார்
- பாரதிதாசன்
விடை : பாரதிதாசன்
9. தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர்
- பாரதியார்
- ஓளவையார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
விடை : பாரதிதாசன்
10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது
- அம்பு
- வானம்
- வாள்
- வேல்
விடை : வானம்
11. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் _____________ போன்றது
- தேன்
- தோள்
- நெல்
- பால்
விடை : தோள்
B. பொருத்துக
1. வாழ்வுக்கு | வாள் |
2. உயர்வுக்கு | ஊர் |
3. கவிதைக்கு | வான் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ |
C. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _________________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன
விடை : தாய்மொழியைத்
2. _________________ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்
விடை : பாரதிதாசன்
3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் _________________
விடை : தமிழ்
4. _________________ எங்கள் சமூக வளர்ச்சிக்கு ஊர் ஆகும்
விடை : இன்பத்தமிழ்
D. சேர்த்து எழுதுக
- அமுது + என்று = அமுதென்று
- இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்
- மணம் + என்று = மணமென்று
E.பிரித்து எழுதுக
- நிலவென்று = நிலவு + என்று
- புகழ்மிக்க = புகழ் + மிக்க
- சுடர்தந்த = சுடர் +தந்த
Tamil Nadu 6th Standard Tamil Book Term 1 Book Back Answers