I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிரம் என்பது ______________ (தலை / தளை)
விடை : தலை
2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை)
விடை : தழை
3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை)
விடை : காளை
4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை)
விடை : பரவை
5. பறவை வானில் ______________ (பரந்தது / பறந்தது)
விடை : பறந்தது
6. கதவை மெல்லத் ______________ (திரந்தான் / திறந்தான்)
விடை : திறந்தான்
7. பூ ______________ வீசும். (மணம் / மனம்)
விடை : மணம்
8. புலியின் ______________ சிவந்து காணப்படும். (கன் / கண்)
விடை : கண்
9. குழந்தைகள் ______________ விளையாடினர். (பந்து / பன்து)
விடை : பந்து
10. வீட்டு வாசலில் ______________ போட்டர். (கோளம் / கோலம்)
விடை : கோலம்