TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 30 JUNE 2023

CURRENT AFFAIRS –30 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ஜூன் 30 நடப்பு கால நிகழ்வுகள்

1.தேசிய புள்ளியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A. ஜூன் 28
B. ஜூன் 29
C. ஜூன் 30
D. ஜூன் 26
குறிப்பு:
 பிரசாந்த சந்திர மஹோவ்நோபிஸ் பிறந்த நாளே தேசிய புள்ளியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இந்திய புள்ளியியலின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

2.தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A. சங்கர் ஜிவால்
B. சிவ்தாஸ் மீனா
C. சந்திப் ராய் ரத்தோர்
D. ஷகீல் அக்தர்
குறிப்பு:
 தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா இன்று பொறுப்பேற்க உள்ளார்.
 25க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள்,பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகளில் பணியாற்றி 34 ஆண்டு கால ஆட்சி பணி அனுபவம் பெற்ற சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் 49வது தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3.புதுடெல்லியில் எத்தனையாவது கூட்டுறவுத்துறை மாநாடு ஜூலை 1 நடைபெற உள்ளது?
A.11
B.15
C.17
D.20
குறிப்பு:
 புது தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் 17ஆவது இந்திய கூட்டுறவுத்துறை மாநாட்டை ஜூலை ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
 இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் என் சி யூ ஐ சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் நேபாளம், வங்கதேசம், இலங்கை, ஈரான், மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூக்கினியா ஆகிய எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

4.தமிழக காவல்துறையின் 31 வது தலைமை இயக்குநர் யார்?
A.சங்கர் ஜிவால்
B.சைலேந்திரபாபு
C.சந்திப் ராய்
D.ரத்தோர் சிவகுமார்
குறிப்பு:
 தமிழக காவல்துறையின் 31 வது தலைமை இயக்குனராக டிஜிபி சங்கர் ஜீவால் நியமனம் செய்யப்பட்டார்.
 தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகப் பணியாற்றி வந்த சைலேந்திரபாபு ஜூன் 30 ஓய்வு பெறுகிறார்.

5.காவல்துறை சார்பில் ‘ட்ரோன்’காவல் பிரிவை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
A. பீகார்
B. மகாராஷ்டிரா
C. தமிழ்நாடு
D. குஜராத்

குறிப்பு:
 சென்னை பெருநகர காவல் துறை சார்பில் ஸ்டோன் காவல் பிரிவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி சைலேந்திரபாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 தமிழக காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க கால விழா அடையாறு அருணாசலபுரம் முத்துலட்சுமி பூங்கா அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்த ட்ரோன்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியதாகும் ட்ரோன்கள் மூலம் பண்டிகை விழா கூட்டங்கள் நிறைந்த இடங்களில் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக நிர்ணயிக்க முடியும் மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான உத்திகளையும் வகுக்கலாம்.
 மக்கள் நடமாட்டம் திருட்டு கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து விரைந்து கைது செய்ய முடியும்.
 சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக கண்காணித்து குற்றத்தில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்யலாம்.

6.மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்காக எந்த திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
A. பிரதமர் பிரணாம்
B. பிரதமர் இயற்கை உரம்
C. பிரதமர் மாற்று உரம்
D. பிரதமர் வள உரம்
குறிப்பு:
 மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கு ரசாயன உரங்களை நம்பி இருப்பதை குறைப்பதற்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் பிரதமர் பிரணாம் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 30 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d