Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(January 1th-5th Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Jan 1th-5th Current Affairs.
தமிழ்நாடு
இருபதாவது ‘சாஸ்திர’ என்ற பெயரிலான சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப திருவிழா 3 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி ஜனவரி 2019 வரை நடைபெறுகிறது
-
- தூய்மைக்கான நகரங்கள் குறித்த தூய்மை 2020 சர்வேயில் குறைந்த மக்கள்தொகை நகரங்கள் பிரிவில் தெற்கு மண்டலத்தில் தமிழகத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி, டீ .கல்லுப்பட்டி, கங்குவார் பட்டி ஆகியவை தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது
- நிதி ஆயோக் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals India Index 2020)
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course

- திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 20 ஆண்டு நிறைவு விழா 1-1-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 1-1-2000 அன்று நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது
- இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் திருநங்கை என்னும் பெருமையை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற திருநங்கையா பெற்றுள்ளார்
- தமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருது – எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற்ற தமிழகத்திற்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி 2 1 2019 அன்று வழங்கினார் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விருதை பெற்றுக்கொண்டார் வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது
- தமிழகத்தில் போட்டரி வாகனங்களுக்கான 256 மின்னேற்ற நிலையங்கள் உட்பட நாடு தழுவிய அளவில் 2646 மின்னேற்ற நிலையங்கள் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்
- முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி எஸ் பாண்டியன் ஜனவரி 4 ஆம் தேதி அன்று காலமானார் தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகராக 1985 இலிருந்து 1989 வரை பணியாற்றினார்
இந்தியா
- இதை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே கேரளா, இமாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம் ,தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பெற்றுள்ளன.மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன
- இந்திய அரசு பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கையெழுத்திட்டுள்ளது.
Deenadayal Antyodaya Yojana National Urban Livelihood Mission DAY-NULM
தீனதயால் அந்தியோதயா திட்டத்தின் கீழ் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பெண்கள் சுய உதவிக்குழுவினர் இன் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு மற்றும் மின் வணிக நிறுவனம் இடையே 30-12-2019 அன்று புனித ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

National Tribal Dance Festival
- சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் தேசிய பழங்குடி நடன விழாவின் 2019 பதிப்பு தொடங்கியது.
- மூன்று நாள் நடன விழா 2019 டிசம்பர் 27-29 வரை நடைபெறும்.
- இந்த விழாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திறந்து வைத்தார், தொடக்க விழாவை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமை தாங்கினார்.
- இந்த தேசிய நிகழ்வில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (யுடி) 1300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்
- இந்நிகழ்ச்சியில் பங்களாதேஷ், இலங்கை, பெலாரஸ், மாலத்தீவு, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்துகொள்வார்கள்.
- இந்த மூன்று நாட்களில், 29 பழங்குடி குழுக்கள் நான்கு வெவ்வேறு நடன வடிவங்களில் 43 க்கும் மேற்பட்ட பாணிகளை வழங்கும்.
National Childrens Science Congress
- 27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 27-31-ஆம் தேதி வரைநடைபெற்றது. இந்த மாநாட்டில் மையக்கரு பசுமைத் தூய்மை மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு
- தனு ஜாத்ரா என்னும் பாரம்பரிய திறந்தவெளி அரங்கு திருவிழா 31-12-2019 அன்று ஒரிசாவின் பார்கார்க் எனும் இடத்தில் தொடங்கியது
-
- அடல் கிசான் மஸ்தூர் உணவகம் என்ற பெயரில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் குறைந்த விலை உணவகங்களை அரியானா அரசு அமைத்துள்ளது
- டோர்னியர் 228
இந்த ரக போர் விமானம் இந்திய விமானப்படையின் 41 ஆவது பிரிவில் அதிகாரப்பூர்வமாக 31-12-2019 அன்று இணைக்கப்பட்டது. இந்த புதிய தொழில் நுட்ப டோர்னியர் ரக விமானம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் “இந்தியாவில் தயாரிப்போம்’ எனும் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது
- ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (RPF – IRPF)
- புதிதாக இராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கம்: இந்தியாவில் முதன்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இது புதிதாக நாட்டின் முதலாவது முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் தலைமையில் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரின் பதவி 3 ஆண்டுகள்.
- நாட்டில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தில் உள்ளது.
- புது தில்லியில் உள்ள பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- 14வது உலக சுகாதார கூடுகை 2021 ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 ஜனவரி 2021 அன்று நடைபெற உள்ளது. Global Healthcare Summit – 2021
- “மணி” மொபைல் செயலி என்ற பெயரில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் ரூபாய் நோட்டுக்களில் உண்மைத் தன்மையைக் கண்டறிய உதவும் கண்டறிவதற்கான மொபைல் செயலி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் 1-1-2020 அன்று வெளியிட்டார்
- 107 வது இந்திய அறிவியல் மாநாடு 3 முதல் 17 ஜனவரி 2020 வரை பெங்களூரில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டின் மையக்கரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஊரக வளர்ச்சி. Indian Science Congress
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் ஆராய்ச்சியாளர்கள் சோதனைக் கூடங்களை பிரதமர் மோடி அவர்கள் பெங்களூருவில் தொடங்கி வைத்தார். இந்த புதிய ஆய்வகங்கள் பெங்களூரு மும்பை சென்னை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட உள்ளன (DRDO- Young Scientist Lab)
- 28 வது புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா 2020 ஜனவரி 4- 12 வரை நடைபெறுகிறது
- Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course
- SI Test Batch NTPC Video Course RRR Test Batch
- RRB Video Course Other Video Course
-
ஒருங்கிணைந்த உதவி என்– 139
ரயில் பயணத்தின்போது பயணிகளில் விரைவான குறை தீர்ப்பதற்காகவே கோரப்படும் தகவல்களுக்கு விரைந்து பதில் அளிப்பதற்கு இந்த உதவி என்னை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 182 உதவி எண்ணில் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும்.
- உலகின் இரண்டாவது மிகவும் உயர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 1 2009 அன்று திறக்கப்பட்டது. இதன் உயரம் 50 அடி
- Khadi & Village Industries Commission – Silk Processing Plant
காதி மற்றும் கிராம தொழில் சாலைகள் கமிஷனின் முதல் பட்டு பதனிடும் குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. குஜராத் குஜராத்தின் பட்டோல சேலைகள் தயாரிப்பதற்காக இந்தப் பட்டு பதனிடும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காதி கமிஷனின் தலைமையிடம் மும்பையில் உள்ளது
இந்தியாவின் முதல் நன்னீர் ஆமைகள் மறுவாழ்வுமையம் பீகாரின் பகல்பூர் காட்டில் திறக்கப்பட்டுள்ளது

விளையாட்டு
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குளோப்சாகர் (Globe Soccer) விருது வழங்கப்பட்டுள்ளது
தேசிய சீனியர் வாலிபால்
- ஆறு ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் சாம்பியன்.புவனேஸ்வரில் நடைபெற் ஆடவர் பெரியவ தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் 6 ஆண்டுக்கு பின் தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது
- 23 வயதுப் பிரிவு சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில்
இந்தியாவின் 23 வயது இளம் வீரர் மாணவ் தாக்கர் முதல் நிலை வீரரான அறிவிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
- 2020 ஆம் ஆண்டை சர்வதேச மருத்துவச்சிகள் மற்றும் தாதியர் (International Year for Nurse & Midwife) ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது
- ஜனவரி 4 – உலக பிரெய்லி தினம்- கண்பார்வையற்றோருக்கான ஆறு புள்ளிகளை கொண்ட பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி அவர்களின் பிறந்த தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது
Check All Month Current Affairs
Download 1th &-5th Current Affairs PDF
Jan 1th & 5th Current Affairs PDF
நியமனங்கள்
- Chief of Defence Staff
இந்தியாவின் 28 ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் பொறுப்பேற்றார்
- ரயில்வே வாரியத்தின் தலைவராக வினோத் குமார் யாதவ் மறுபடியும் ஓராண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்
- தேசிய மருத்துவ கமிஷனின் முதலாவது தலைவராக சுரேஷ் சந்திரா ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
- இங்கிலாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

வெளிநாட்டு உறவுகள்
- இந்தியா பாகிஸ்தான் இடையே இரு நாடுகளில் உள்ள அணு ஆற்றல் நிறுவல்கள் பற்றிய தகவல்கள் ஜனவரி 1, 2020 அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டது . 31-12-1988 ராஜீவ்காந்தி-பெனசீர் பூட்டோ ஒப்பந்தப்படி 1992ல் இருந்து ஆண்டுதோறும் இந்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகிறது


Dinamani Model Questions post pls.