36th International Geological Congress 36-வது சர்வதேச புவியியல் மாநாடு 36-வது சர்வதேச புவியியல் மாநாடு புதுதில்லியில் வரும் 20 முதல் 22ம் தேதி வரை மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான கருப்பொருள் “புவிஅறிவியல்: நிலையான வருங்காலத்துக்கான அடிப்படை அறிவியல்” என்பதாகும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம் Central Economic Zone Under Sagarmala Scheme சாகர்மாலா திட்டத்தின் தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 பொருளாதார மண்டலங்கள் உட்பட 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் முன்மாதிரி அடிப்படையில் ஒரு மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…
Tamil Nadu Govt awards தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இங்கிலாந்தில் மைக்கல் ஓ’டவையரை உதம்சிங் சுட்டு கொன்றார். 13 மார்ச் 1940 13 மார்ச் 1940-ல் ஷாஹித் உதம்சிங் மைக்கல் ஓ’ட்வையரை இங்கிலாந்தில் சுட்டு கொன்றார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது 2020-2021ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட திரு. செ. மூர்த்தி, திரு. கோ. பொன்னு புதியவன், திருமதி பி. லட்சுமி தேவி ஆகியோருக்கு விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
அவ்வையார் விருது 2022 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில் “அவ்வையார் விருது” தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது
காந்தி இர்வின் ஒப்பந்தம் 1931 (மார்ச் 5 1931) லண்டனில் நடைபெற்ற 2-வது வட்டமேசை மாநாட்டிற்கு முன்னதாக 1931 மார்ச் 5 அன்று மகாத்மா காந்தி & இந்தியாவுக்கான வைஸ்ராயான இர்வின் பிரபு ஆகியோருக்கிடையே கையெழுத்திடப்பட்ட அரசியல் ஏற்பாடே இர்வின் ஒப்பந்தமாகும். உப்பு வரியை நீக்குதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
லாலா ஹர்தயாள் (14 அக்டோபர்-1884 – 4 மார்ச் 1939) ✅ லாலா ஹர்தயாள் – தேசியப் புரட்சியாளர், பலவகை கலை நிபுணர், சுதந்திரப் போராட்ட வீரர் ✅ இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் செல்வாக்கு செலுத்திய கதார் கட்சியின் முக்கிய பங்கேற்பாளராக இருந்தவர்
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – February – (4 – 27) – 2022 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
பி.என்.பணிக்கர் இந்தியாவின் “நூலக இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் பி.என்.பணிக்கர், புத்தக வாசிப்பின் மதிப்பை பறைசாற்றும் வகையில் கேரளாவில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று சுமார் 6,000 நூலகங்களை திருவிதாங்கூர் நூலகச் சங்கத்திற்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11 நவம்பர் 1888 – 22 பிப்ரவரி 1958) SHORT NOTES 11-நவம்பர்-1888-ம் ஆண்டு மெக்காவில் பிறந்தார்.
கோபால கிருஷ்ண கோகலே (9 மே 1866 – 19 பிப்ரவரி 1915)
உலக தாய்மொழிகள் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Scheme – Pradhan Mantri Fasal Bima Yojana பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் அமலாக்கம், 6 ஆண்டுகளை நிறைவு செய்து, வரும் காரீப் 2022 பருவத்துடன் 7ம் ஆண்டில் நுழைகிறது.
கீழடியில் செவ்வக வடிவில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது.
